Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/செம்மண் அள்ளிய வழக்கு: பொன்முடியின் ரூ.14 கோடி சொத்துக்கள் முடக்கம்

செம்மண் அள்ளிய வழக்கு: பொன்முடியின் ரூ.14 கோடி சொத்துக்கள் முடக்கம்

செம்மண் அள்ளிய வழக்கு: பொன்முடியின் ரூ.14 கோடி சொத்துக்கள் முடக்கம்

செம்மண் அள்ளிய வழக்கு: பொன்முடியின் ரூ.14 கோடி சொத்துக்கள் முடக்கம்

ADDED : ஜூலை 26, 2024 06:29 PM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: மணல் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளிய வழக்கில் அமைச்சர் பொன்முடியின் ரூ 14.21 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.

கடந்த 2006-11-ம் ஆண்டு தி.மு.க., ஆட்சிக்காலத்தில், விழுப்புரம் மாவட்டம், வானுார் தாலுகா பூத்துறை கிராமத்தில் அரசு செம்மண் குவாரியை, ஏலம் எடுத்து, அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக புகார் எழுந்தது. இதனை அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது ,

இந்த வழக்கில் இன்று நடவடிக்கை எடுத்து பொன்முடி அவரது மகன் கவுதமசிகாமணி ஆகியோருக்கு சொந்தமான ரூ. 14.21 கோடி மதிப்பிலான அசையும், அசையா சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us