ராமநாதபுரம், நெல்லையில் இருந்து மைசூருக்கு சிறப்பு ரயில்கள்
ராமநாதபுரம், நெல்லையில் இருந்து மைசூருக்கு சிறப்பு ரயில்கள்
ராமநாதபுரம், நெல்லையில் இருந்து மைசூருக்கு சிறப்பு ரயில்கள்
ADDED : செப் 14, 2025 06:13 AM

சென்னை:திருநெல்வேலி, ராமநாதபுரத்தில் இருந்து, கர்நாடகா மாநிலம் மைசூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இது குறித்து, தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட அறிக்கை:
கர்நாடகா மாநிலம் மைசூரில் இருந்து, நாளை முதல் நவ., 24 வரை வாரந்தோறும் திங்கள் கிழமைகளில், இரவு 8:15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 11:30 மணிக்கு திருநெல்வேலி செல்லும்
திருநெல்வேலியில் இருந்து, வரும் 16 முதல் நவ., 25 வரை வாரந்தோறும் செவ்வாய் கிழமைகளில் மாலை 3:40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5:40 மணிக்கு மைசூரு செல்லும்
மைசூரில் இருந்து, வரும் 18 முதல் நவ., 29ம் தேதி வரை, வியாழன், சனிக்கிழமைகளில் இரவு 9:20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 11:00 மணிக்கு காரைக்குடி செல்லும்
காரைக்குடியில் இருந்து, வரும் 19 முதல் நவ., 30 வரை வெள்ளி, ஞாயிறுகளில் மாலை 6:45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7:45 மணிக்கு மைசூரு செல்லும்
மைசூரில் இருந்து, நாளை முதல் அக்., 27 வரை வாரந்தோறும் திங்கள் கிழமைகளில், மாலை 6:35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 10:00 மணிக்கு ராமநாதபுரம் செல்லும்
ராமநாதபுரத்தில் இருந்து, வரும் 16 முதல் அக்., 28 வரை செவ்வாய் கிழமைகளில், மாலை 3:10 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7:45 மணிக்கு மைசூரு செல்லும்.
சிறப்பு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.