Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/கிராண்ட் செஸ்: பிரக்ஞானந்தாவை வென்றார் குகேஷ்

கிராண்ட் செஸ்: பிரக்ஞானந்தாவை வென்றார் குகேஷ்

கிராண்ட் செஸ்: பிரக்ஞானந்தாவை வென்றார் குகேஷ்

கிராண்ட் செஸ்: பிரக்ஞானந்தாவை வென்றார் குகேஷ்

ADDED : ஜூலை 04, 2025 01:21 AM


Google News
Latest Tamil News
ஜாக்ரெப்: கிராண்ட் செஸ் தொடரின் 10வது சீசன் (மொத்தம் 5 தொடர்) தற்போது நடக்கிறது. இதன் மூன்றாவது தொடர் குரோஷியாவில் நடக்கிறது.

உலக சாம்பியன், இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா, நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் உட்பட 10 பேர் பங்கேற்கின்றனர். முதலில் 'ரேபிட்' முறையில் போட்டி நடக்கிறது.

முதல் நாளில் 3 சுற்று நடந்தன. முதல் சுற்றில் குகேஷ், போலந்தின் ஜான் டுடாவிடம் தோல்வியடைந்தார். பின் சுதாரித்த குகேஷ், அடுத்த சுற்றில் பிரான்சின் அலிரேசாவை வென்றார். 3வது சுற்றில் குகேஷ் - பிரக்ஞானந்தா மோதினர்.

கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய குகேஷ், 38 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.

முதல் 3 சுற்று முடிவில் கார்ல்சன் (4.0), ஜான் டுடா (4.0), அமெரிக்காவின் வெஸ்லே (4.0), குகேஷ் (4.0) 'டாப்-4' இடங்களில் உள்ளனர். முதல் இரு சுற்றில் 'டிரா' செய்த பிரக்ஞானந்தா (2.0) கடைசி இடத்தில் (10) உள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us