Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகும் ஈரான்

அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகும் ஈரான்

அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகும் ஈரான்

அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகும் ஈரான்

ADDED : ஜூன் 16, 2025 04:51 PM


Google News
Latest Tamil News
டெஹ்ரான்: அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலக ஈரான் முடிவு செய்துள்ளது.

இஸ்ரேல், ஈரான் இடையே எழுந்துள்ள போர் தீவிரம் அடைந்துள்ளது, உலக நாடுகள் இடையே கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. பரஸ்பரம் இரு நாடுகளும் மேற்கொண்டு வரும் வான்வழி தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

அமைதி பேச்சுவார்த்தைக்கு ஈரான் மறுத்துவிட்டதோடு, இஸ்ரேல் நடத்தி வரும் அதிரடி தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. இந் நிலையில், அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதற்காக மசோதாவை தயாரிக்க ஈரான் பார்லிமெண்ட் தயாராகி வருகிறது.

இதனை ஈரான் வெளியுறவு அமைச்சர் இஸ்மாயில் பகாயி உறுதிப்படுத்தி உள்ளார். ஆனாலும் பேரழிவு ஆயுதங்களை டெஹ்ரான் தயாரிப்பதை எதிர்த்து வருவதாக தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் அந்நாட்டு அதிபர் மசூத் பெசேஷ்கியன் கூறுகையில், ஈரானுக்கு அணு ஆயுதங்களை தயாரிக்கும் எண்ணம் இல்லை, ஆனால் அணுசக்தி மற்றும் ஆராய்ச்சிக்கான உரிமையை தொடர்ந்து வலியுறுத்தும் என்று கூறினார்.

அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தம் என்பது அணு ஆயுதங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய நொழில்நுட்பங்களின் பரவலை தடுப்பது, அமைதியான மற்றும் ஆக்கப்பூர்வ முறையில் அணு ஆயுதத்தை பயன்படுத்துவதில் முழு ஒத்துழைப்பை அளிப்பது போன்றவற்றை நோக்கமாக கொண்டதாகும். இது ஒரு சர்வதேச ஒப்பந்தமும் கூட.

1970 முதல் இந்த ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளது. கிட்டத்தட்ட 191 நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. ஆனால் தெற்கு சூடான், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. 2003ம் ஆண்டு இந்த ஒப்பந்தத்தில் இருந்து வடகொரியா விலகியது, குறிப்பிடத்தக்கது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us