நேபாளத்தில் கட்டுக்கடங்காத கலவரம் அதிபர், பிரதமர், அமைச்சர்கள் பதவி விலகல் மாஜி பிரதமர் மனைவி உயிருடன் எரிப்பு
நேபாளத்தில் கட்டுக்கடங்காத கலவரம் அதிபர், பிரதமர், அமைச்சர்கள் பதவி விலகல் மாஜி பிரதமர் மனைவி உயிருடன் எரிப்பு
நேபாளத்தில் கட்டுக்கடங்காத கலவரம் அதிபர், பிரதமர், அமைச்சர்கள் பதவி விலகல் மாஜி பிரதமர் மனைவி உயிருடன் எரிப்பு
உருமாற்றம்
ஆனால் இரண்டாவது நாளாக நேற்று கலவரம் உச்சமடைந்தது. இதில் தலைநகர் காத்மாண்டு சின்னாபின்னமானது. சமூக வலைதள தடைக்கு எதிராக துவங்கிய போராட்டம், அரசின் ஊழல், வாரிசு அரசியல் போன்றவற்றுக்கு எதிரான கலவரமாக உருமாறியது.காத்மாண்டுவில் உள்ள நேபாள பார்லிமென்ட் வளாகத்திற்குள் நேற்று நுழைந்த இளைஞர்கள், மேற்கு நுழைவாயிலை உடைத்து உள்ளே நுழைந்து, தீ வைத்தனர். அதன் அருகில் உள்ள நேபாள அரசின் செயலகமான சிங்க தர்பார், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றையும் தீ வைத்து எரித்தனர்.இந்த கலவரங்களில் ஆளும் கூட்டணி கட்சிகளின் அலுவலகங்கள் குறிவைத்து தாக்கப்பட்டன. நேபாள காங்கிரஸ், நேபாள கம்யூனிஸ்ட் கட்சிகள் அலுவலகங்களை இளைஞர்கள் சூறையாடினர்.நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி, அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். அதற்குள் தலைநகரில் நிலைமை மோசமானது. இதனால் ராணுவம் தலையிட்டு, நிலைமையை சீராக்க வேண்டும் என ராணுவ தளபதி அசோக் ராஜ் சிக்டெலிடம் பிரதமர் ஒலி வலியுறுத்தினார்.
ராணுவ ஆட்சி
பிரதமர் அலுவலகம் மற்றும் அவரது வீட்டையும் கலவர கும்பல் விட்டு வைக்கவில்லை. அடித்து நொறுக்கி, தீ வைத்தனர். 'சர்மா ஒலி திருடன், நாட்டை விட்டு வெளியேறு' போன்ற கோஷங்களை எழும்பினர்.