Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/ வங்கதேச 'மாஜி' பிரதமர் மகனுக்கு எதிராக 'வாரன்ட்'

 வங்கதேச 'மாஜி' பிரதமர் மகனுக்கு எதிராக 'வாரன்ட்'

 வங்கதேச 'மாஜி' பிரதமர் மகனுக்கு எதிராக 'வாரன்ட்'

 வங்கதேச 'மாஜி' பிரதமர் மகனுக்கு எதிராக 'வாரன்ட்'

ADDED : டிச 05, 2025 01:26 AM


Google News
Latest Tamil News
டாக்கா: வங் கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகனுக்கு எதிராக, அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது.

நம் அண் டை நாடான வங்கதேசத்தில், கடந்தாண்டு ஆகஸ்டில் அரசுக்கு எதிராக நடந்த இளைஞர் போராட்டத்தால், ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை இழந்தார். மேலும், நாட்டை விட்டு வெளியேறிய அவர் இந்தியாவில் தஞ்சமடைந்தார்.

இளைஞர்கள் போராட்டத்தில் நடந்த வன்முறை சம்பவத்தில், 1,400 பேர் உயிரிழந்தனர். மாணவர்களை கொடூரமாக அடக்க முயன்றதாக ஷேக் ஹசீனா மீது, அந்நாட்டின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும், ஷேக் ஹசீனா மீது தொடரப்பட்ட மூன்று ஊழல் வழக்குகளுக்காக, 21 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

ஹசீனா மட்டுமின்றி, அமெரிக்காவில் வசிக்கும் அவரது மகன் சஜீப் வஜித் பாய் மற்றும் மகள் சைமா வஜித் புத்துல் ஆகியோருக்கும், தலா ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

தகவல் தொழில்நுட்ப வல்லுனரான சஜீப் வஜித் ஜாய், 54, அமெரிக்காவில் வசித்து வருகிறார். அவர், தன் தாய் ஹசீனாவுக்கு தகவல் தொடர்பு ஆலோசகராக உள்ளார்.

இந்நிலையில் மாணவர் மீதான ஒடுக்குமுறை தொடர்பாக அவரை கைது செய்ய சிறப்பு நீதிமன்றம் கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது.

அவருடன் சேர்த்து, முன்னாள் தகவல் தொழில்நுட்ப இணையமைச்சர் ஜுனைத் அகமது பாலக்கிற்கு எதிராகவும் வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us