முதல்வர் வருகைக்காக.! கோவை அரசு கலைக் கல்லூரியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிக்காக மேடை அமைக்கப்பட்டு வருகிறது. அங்கு நாற்காலியில் அமர்ந்தபடி அமைச்சரின் வருகைக்காக காத்திருந்த கலெக்டர் கிராந்திகுமார் மற்றும் மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின் மற்றும் தி.மு.க வினர். இடம் : மெரினா கடற்கரை
திண்டுக்கல் முத்தழகுபட்டி புனித செபஸ்தியார் சர்ச் திருவிழாவில் விடியவிடிய நடக்கும் அன்னதானத்திற்கு மொகா சைஸ் பாத்திரத்தில் சமையல் செய்து தூக்கி சென்றனர்.
கோவை மாநகராட்சி புதிய மேயர் ரங்கநாயகிக்கு மேயர் பதவிக்கான சான்றிதழை அமைச்சர் நேரு வழங்கினார். அருகில் அமைச்சர் முத்துசாமி, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன்,துணை மேயர் வெற்றிச்செல்வன், முன்னாள் எம்.எல்.ஏ., கார்த்திக் உள்ளிட்டோர்.