தென்மேற்கு பருவமழை காரணமாக உத்தர பிரதேசத்தில் கனமழை பெய்து வருகிறது; கங்கை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. உன்னாவ் பகுதியில் கரையோரங்களில் உள்ள குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால் அங்குள்ள பொதுமக்கள் தங்கள் அன்றாட பணிகளை மேற்கொள்ள படகுகளை பயன்படுத்தி வருகின்றனர்.
கேரளாவில் 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும் ஓணம் பண்டிகை துவங்கியது; இதையொட்டி கேரளாவின் கொச்சியில் நடந்த ஓணம் பண்டிகையின் துவக்க விழாவில் பாரம்பரிய உடை அலங்காரங்களுடன் பங்கேற்ற கலைஞர்கள்.
சென்னை பாடிகார்ட் முனீஸ்வரர் கோவிலில் ஆடி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் தனியார் யோகா பயிற்சி மையம் சார்பில் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேசியக் கொடியின் மூவர்ண உடையில் யோகா செய்து அசத்திய மாணவியர்.