Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/தி.மு.க. நகராட்சிதுணைத்தலைவர் மீது நில‌அபகரிப்பு புகார்

தி.மு.க. நகராட்சிதுணைத்தலைவர் மீது நில‌அபகரிப்பு புகார்

தி.மு.க. நகராட்சிதுணைத்தலைவர் மீது நில‌அபகரிப்பு புகார்

தி.மு.க. நகராட்சிதுணைத்தலைவர் மீது நில‌அபகரிப்பு புகார்

ADDED : அக் 02, 2011 10:38 AM


Google News
ஆத்தூர்: நிலஅபகரிப்பு செய்ததாக தி.மு.க.

நகராட்சி துணைத்தலைவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அவர் கைது செய்யப்பட்டார். சேலம் மாவட்டம் ஆத்தூரில் நரசிங்கபுரம் நகராட்சி தி.மு.க. துணைத்தலைவராக இருந்தவர் காட்டுராஜா என்ற பழனிச்சாமி, இவர் தற்போது அநே நகராட்சி தலைவர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிடுகிறார். இந்நிலையில் இவர் மீது அதே பகுதியைச் சேர்ந்த ஜோதி,60 என்ற பெண், தனக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தை கடந்த 2004-ம் ஆண்டு, காட்டுராஜா, அவரது மனைவி செல்வி, வேலவன் ஆகியோர் மிரட்டி நிலத்தை அபகரித்துதாக சேலம் நில அபகரிப்பு பிரிவு போலீசாரிடம் புகார் செய்தார். இது தொடர்பாக நேற்று செல்வி, வேலவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இன்று உள்ளாட்சித்தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த போது காட்டுராஜாவை கைது செய்யப்பட்டார். அவர் மீது போலீசார் நில அபகரிப்பு உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us