Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/எல்லாவற்றிற்கும் தொலைத்தொடர்பு அமைச்சகமே பொறுப்பு: சிதம்பரம்

எல்லாவற்றிற்கும் தொலைத்தொடர்பு அமைச்சகமே பொறுப்பு: சிதம்பரம்

எல்லாவற்றிற்கும் தொலைத்தொடர்பு அமைச்சகமே பொறுப்பு: சிதம்பரம்

எல்லாவற்றிற்கும் தொலைத்தொடர்பு அமைச்சகமே பொறுப்பு: சிதம்பரம்

ADDED : ஜூலை 25, 2011 10:06 PM


Google News
Latest Tamil News

புதுடில்லி : யுனிடெக் மற்றும் ஸ்வான் நிறுவன பங்குகளை விற்க நான் அனுமதிக்கவில்லை என, மத்திய அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக கைதாகியுள்ள முன்னாள் அமைச்சர் ராஜா, சி.பி.ஐ., கோர்ட்டில் நேற்று வாதாடுகையில், 'பிரதமர் மற்றும் அப்போதைய நிதியமைச்சர் சிதம்பரம் முன்னிலையில் தான் ஸ்பெக்ட்ரம் தொடர்பான விவகாரங்கள் நடந்தன' என, தெரிவித்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்து, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் குறிப்பிடுகையில், 'ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் 2001ம் ஆண்டு நடை முறையில் இருந்து நுழைவுக் கட்டணத்தையே பின்பற்ற வேண்டும் என்று தொலைத்தொடர்புத் துறை அமைச்சகம் விரும்பியது. '2ஜி' ஸ்பெக்ட்ரத்தை ஏலத்தின் மூலம் ஒதுக்கீடு செய்யும்படி அறிவுறுத்தினோம்.

ஆனால், இதை தொலைத் தொடர்புத் துறை அமைச்சகம் ஏற்கவில்லை. ஸ்வான் மற்றும் யுனிடெக் நிறுவனங்கள் ஏற்கனவே '2ஜி' ஸ்பெக்ட்ரம் லைசென்சை பெற்றுக்கொண்டன. இந்த நிறுவனங்கள் புதிய பங்குதாரரை சேர்த்துக் கொண்டது எப்படி என்பது குறித்து நானும், பிரதமரும் ஆராய்ந்தோம். மற்றபடி இதற்கு அனுமதி கொடுத்ததெல்லாம் தொலைத்தொடர்பு அமைச்சகம் தான்' என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us