Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/அணைப்பட்டி சுற்றுலா தலம் ஆக்கப்படும் : மாவட்ட கவுன்சில் வேட்பாளர் பேச்சு

அணைப்பட்டி சுற்றுலா தலம் ஆக்கப்படும் : மாவட்ட கவுன்சில் வேட்பாளர் பேச்சு

அணைப்பட்டி சுற்றுலா தலம் ஆக்கப்படும் : மாவட்ட கவுன்சில் வேட்பாளர் பேச்சு

அணைப்பட்டி சுற்றுலா தலம் ஆக்கப்படும் : மாவட்ட கவுன்சில் வேட்பாளர் பேச்சு

ADDED : அக் 08, 2011 10:50 PM


Google News

நிலக்கோட்டை : ''அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோயிலை சுற்றுலா தலம் ஆக்க தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்,'' என, நிலக்கோட் டை ஒன்றிய அ.தி.மு.க., மாவட்ட கவுன்சிலர் வேட்பாளர் ஏ.சி.பாலசுப்பிரமணியன் பேசினார்.

பிரசாரத்தில் அவர் பேசியது: வைகை பெரியாறு கால்வாய் திட்டத்தில் ஆவாரம்பட்டி கண்மாய்க்கு நீர் செல்வதில் உள்ள இடையூறுகளை களைய, மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். குல்லிசெட்டிபட்டி வழி, வத்தலக்குண்டு-நிலக்கோட்டை வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க, அமைச்சர் விஸ்வநாதன் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோயிலை சுற்றுலா தலமாக்க முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று பூங்கா, நீரூற்றுகள் அமைக்க ஆவண செய்யப்படும். அணைப்பட்டி- ராமராஜபுரம் ரோடு தரம் உயர்த்தி அகலப்படுத்தவும், திண்டுக்கல், மதுரை, உசிலம்பட்டியில் இருந்து விளாம்பட்டிக்கு பஸ்கள் இயக்க முயற்சி எடுக்கப்படும். குண்டலப்பட்டி- குல்லிசெட்டிபட்டி ரோட்டில் தரைப்பாலங்கள், மேம்பாலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். கிராமங்களில் ரோடுகள் முழுமையாக சீரமைக்கப்படும். கூட்டாத்து அய்யம்பாளையம் பழுதடைந்த பாலம் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும். கிராமங்களில் தெருவிளக்குகள் அமைக்க முன்னுரிமை அளிக்கப்படும், என்றார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us