ADDED : செப் 30, 2011 01:17 AM
துரைப்பாக்கம்:கள்ளக்காதலனுடன், உல்லாசமாக இருந்த மனைவியை சரமாரியாக கத்தியால் குத்திய கணவரை போலீசார் கைது செய்தனர்.துரைப்பாக்கம், சுப்பிராயன் நகரைச் சேர்ந்தவர் ரஜினி, 34. லாரி டிரைவர். இவரது மனைவி மோகன சுந்தரி, 28. ரஜினி நேற்று முன்தினம் வேலைக்கு சென்று மாலை வீடு திரும்பினார்.
அப்போது, தனது மனைவி மோகன சுந்தரி வீட்டில் வேறொரு ஆணுடன் உல்லாசமாக இருப்பதைக் கண்டார்.விசாரித்தபோது, அந்த நபர் மனைவியின் கள்ளக்காதலன் என்பது தெரியவந்தது. ஆத்திரமடைந்த ரஜினி கள்ளக்காதலனிடம் தகராறில் ஈடுபட்டதையடுத்து, அவர் தப்பியோடினார். பின்னர், ரஜினி மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில், தனது கையில் இருந்த கத்தியால் மனைவியை சரமாரியாக உடல் முழுவதும் தாக்கினார்.இதில், பலத்த காயமடைந்த மோகன சுந்தரியை அருகில் இருந்தவர்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். துரைப்பாக்கம் போலீசார் ரஜினியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.