/உள்ளூர் செய்திகள்/திருச்சி/வீட்டு கதவை திறந்தவுடன் தம்பதியரை தாக்கி நகை பறிப்புவீட்டு கதவை திறந்தவுடன் தம்பதியரை தாக்கி நகை பறிப்பு
வீட்டு கதவை திறந்தவுடன் தம்பதியரை தாக்கி நகை பறிப்பு
வீட்டு கதவை திறந்தவுடன் தம்பதியரை தாக்கி நகை பறிப்பு
வீட்டு கதவை திறந்தவுடன் தம்பதியரை தாக்கி நகை பறிப்பு
ADDED : ஆக 03, 2011 12:01 AM
துவரங்குறிச்சி: திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே பாலகுறிச்சியில்
வீட்டின் கதவை தட்டி திறந்தவுடன் தம்பதியினரை தாக்கி விட்டு ஒன்றரை பவுன்
நகையை பறித்து கொண்டு மர்ம நபர்கள் ஓடிவிட்டனர்.பாலகுறிச்சியை சேர்ந்தவர்
பாலமலை(47).
இவரது மனைவி சாவித்திரி(40). இவர்கள் பாலகுறிச்சி பஸ்
ஸ்டாப்பில் பெட்டிக்கடை நடத்தி வருகின்றனர். நாள்தோறும் இரவு 10 மணியளவில்
கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு செல்வது வழக்கமாகும்.நேற்று முன்தினம்
அதிகாலை நான்கு மணியளவில் மூன்று அடையாளம் தெரியாத நபர்கள், பாலமலை வீடு
முன்பக்க கதவை தட்டியுள்ளனர். பாலமலை கதவை திறந்தவுடன், அவரை தாக்கி விட்டு
உள்ளே சென்ற மூன்று மர்ம வாலிபர்களும் கத்தியை காட்டி மிரட்டி சாவித்திரி
அணிந்திருந்த தாலி கயிற்றிலிருந்த ஒரு பவுன் தாலி, அரை பவுன் இரண்டு
காசுகள் உட்பட ஒன்றரை பவுன் நகையை பறித்துக்கொண்டு ஓடிவிட்டனர்.சாவித்திரி
வளநாடு போலீஸில் கொடுத்த புகாரின் பேரில், துவரங்குறிச்சி போலீஸ்
இன்ஸ்பெக்டர் சுருளியாண்டி, வளநாடு போலீஸ் எஸ்.ஐ., பால்ராஜ் ஆகியோர்
வழக்குப்பதிவுசெய்தனர்.சாவித்திரியின் நகைகளை பறித்துக்கொண்டு தப்பியோடிய
மூன்று மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.


