UPDATED : செப் 15, 2011 11:52 PM
ADDED : செப் 15, 2011 11:48 PM
பொள்ளாச்சி:பொள்ளாச்சி டி.இ.எல்.சி., உதவி பெறும் துவக்கப்பள்ளியிலுள்ள
இணைப்பு மையத்தில், பயிலும் குழந்தைகளுக்கு கற்றல் உபகரணங்கள்
வழங்கப்பட்டன.
பொள்ளாச்சி வெங்கட்ரமணன் வீதியிலுள்ள டி.இ.எல்.சி., அரசு உதவிப்பெறும்
துவக்கப்பள்ளியில், இணைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில்,
பள்ளியிலிருந்து இடைநின்ற நான்கு மாணவர்களும், ஏழு மாணவிகளும்
படிக்கின்றனர். மாணவர்களுக்கான, கற்றல் உபகரணம் வழங்கும் விழா நடந்தது.
பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் ராஜன் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர்
ராஜேந்திரன் தலைமை வகித்தார். வட்டார வள மைய ஆசிரியை கீதா, மகேஸ்வரி
ஆகியோர் மாணவர்களுக்கு பொருட்கள் வழங்கினர். அனைத்து மாணவர்களுக்கும்
கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.


