Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/டாக்டர் காருக்கு தீ வைத்தவருக்கு வலை

டாக்டர் காருக்கு தீ வைத்தவருக்கு வலை

டாக்டர் காருக்கு தீ வைத்தவருக்கு வலை

டாக்டர் காருக்கு தீ வைத்தவருக்கு வலை

ADDED : ஜூலை 14, 2011 11:46 PM


Google News

அரூர்: அரூரில் டாக்டர் காருக்கு தீ வைத்த மர்ம நபரை, போலீஸார் தேடி வருகின்றனர்.அரூர் திரு.வி.க.

நகரை சேர்ந்தவர் டாக்டர் கோபி (30). இவர், நேற்று முன்தினம் வீட்டில் உள்ள கார் செட்டில் காரை நிறுத்தியுள்ளார். நேற்று காலை 6 மணிக்கு வீட்டை விட்டு வெளியில் வந்து பார்த்த போது, காரின் மேல் போர்த்தியிருந்த ரெக்ஸின் கவர் தீப்பற்றி எரிந்தது. இதில், காரின் ஒருபகுதி சேதமடைந்தது. இதுகுறித்து கோபி, அரூர் போலீஸில் புகார் செய்தார். புகாரின் பேரில், எஸ்.ஐ., ராமகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து, காருக்கு தீ வைத்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us