வாகைகுளம் கண்மாயில் மரங்களை வெட்ட தடை
வாகைகுளம் கண்மாயில் மரங்களை வெட்ட தடை
வாகைகுளம் கண்மாயில் மரங்களை வெட்ட தடை
ADDED : அக் 05, 2011 12:49 AM
மதுரை : நெல்லை மாவட்டம் வாகைகுளம் கண்மாயில் பறவைகள் தங்க வசதியாக கருவேல மரங்களை வெட்டுவதற்கு மதுரை ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்தது.
நெல்லை மாவட்டம் அம்பை தாமிரபரணி விவசாயிகள் நல சங்க செயலாளர் பாபநாசம் தாக்கல் செய்த பொது நல வழக்கு: அம்பை தாலுகாவில் வாகைகுளம் கண்மாய் உள்ளது. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு அருகில் உள்ளது. கண்மாயில் கருவேல மரங்கள் உள்ளன. ஆண்டுதோறும் ஏராளமான உள்நாட்டு, வெளிநாட்டு பறவைகள் இங்கு வந்து தங்கும். 85 வகையை சேர்ந்த பத்தாயிரம் பறவைகள் வரை வரும். தற்போது மரங்களை வெட்டுவதால், அவைகள் பாதிப்புக்குள்ளாகும். எனவே மரங்களை வெட்ட தடை விதிக்க வேண்டும். பறவைகள் வந்து தங்கிச்செல்ல ஏதுவாக மரங்களை நட உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. அவசர வழக்காக இதை நீதிபதிகள் சி.எஸ்.கர்ணன், எம்.எம்.சுந்தரேஷ் விசாரித்தனர். மனுதாரர் சார்பில் வக்கீல்கள் அழகுமணி, மலைக்கனி ஆஜராயினர். நீதிபதிகள், மரங்களை வெட்ட இடைக்கால தடை விதித்தனர். விசாரணையை அக்., 10க்கு தள்ளிவைத்தனர்.


