
இப்படியும்ஏமாற்றலாமா?
''ம்ம்... எப்டியெல்லாம் ஏமாத்தறாங்க பாருங்க்கா...'' என்ற மித்ரா, ''தகவல் உரிமை சட்டத்தில் ஏதாச்சும், கேள்வி கேட்டு, டீடெய்ல் கேட்டால், நகல் எடுக்க கட்டணத்தை அரசு கருவூலத்தில் செலுத்தணும். ஆனால், உரிய ஆபீஸ்களில் அங்குள்ள மெஷினிலேயே நகல் எடுத்து விடுகின்றனர்,''
''யாரெல்லம்கேட்கிறாங்க்கா...''
''இல்லடி. இந்த தடவ, புது முகத்துக்குதான் 'சீட்'டுனு, கட்சி மேலிடம் சொல்லிட்டாங்களாம். இத தெரிஞ்சுகிட்டு, மூன்று பேர் மத்தியில் கடும் போட்டியாம். இந்த ரேஸில், மாவட்ட, மாநகராட்சி கவுன்சிலர்களும் இருக்காங்களாம். ஆளுங்கட்சி கூட்டணியில, மறுபடியும் 'சிட்டிங்' தோழர் கட்சிக்கே ஒதுக்கப்படும் என, அக்கட்சியினர் பேசி வருகின்றனர்,''
விபத்து ஒன்றுவசூல் பல...
அப்போது, போலீஸ் வாகனம் ஒன்று சென்றதை, ஜன்னல் வழியே பார்த்த மித்ரா, ''அக்கா, சிற்பக்கூடம் அதிகமுள்ள ஊர் போலீஸ்காரங்க, ரோந்து வாகனத்தை காட்டி வசூல் அள்றாங்களாம்...'' என்றாள்.
உஷாரானபோலீசார்...
''மித்து, போன வாரம், அவிநாசி ஏரியாவில, திருவள்ளுவர் தினத்தன்று 'சரக்கு' விற்பனை 'ஜிபே'யில் பண்றாங்கன்னு பேசினோம்மில்ல. அதனால, தைப்பூச நாளுக்கு முதல் நாளே, எல்லா 'டாஸ்மாக்' கடைக்கும் போன மதுவிலக்கு போலீஸ், 'நாளைக்கு சரக்கு விற்க மாட்டோம். மீறி விற்றால், கடைக்கும், 'பார்'-க்கும் 'சீல்' வைக்க சம்மதிக்கிறேன்னு,' கடை சூபர்வைசர், 'பார்' உரிமையாளர்கிட்ட கையெழுத்து வாங்கிட்டாங்களாம். அதனால, இல்லீகல் 'சரக்கு' சேல்ஸ் எங்கயும் நடக்கலையாம்...'' என்றாள் சித்ரா.


