/வாராவாரம்/சித்ரா...மித்ரா (திருப்பூர்)/ 'பேரு வச்சீங்களே... சோறு வச்சீங்களா?' ஊரு பூரா உருண்டு புலம்பும் பறக்கும் படை 'பேரு வச்சீங்களே... சோறு வச்சீங்களா?' ஊரு பூரா உருண்டு புலம்பும் பறக்கும் படை
'பேரு வச்சீங்களே... சோறு வச்சீங்களா?' ஊரு பூரா உருண்டு புலம்பும் பறக்கும் படை
'பேரு வச்சீங்களே... சோறு வச்சீங்களா?' ஊரு பூரா உருண்டு புலம்பும் பறக்கும் படை
'பேரு வச்சீங்களே... சோறு வச்சீங்களா?' ஊரு பூரா உருண்டு புலம்பும் பறக்கும் படை

தொண்டர்களை உசுப்பேற்றும் கட்சி
''அதிகாரிகள் எப்பவுமே அப்டித்தான் மித்து. அவங்களுக்கு காரியம் ஆகோணும்னா, எல்லாம் சொல்வாங்க,'' சொன்ன சித்ரா, ''நல்லுாரிலுள்ள பிரபலமான கோவிலில், நன்கு வளர்ந்த ரெண்டு வேப்ப மரத்தை வெட்டிட்டாங்க. இதப் பார்த்த மக்கள், வருவாய்த்துறைக்கு புகார் பண்ணிடாங்க. அதிகாரிகளும் போய் ஆய்வு செஞ்சப்ப, ''அது ஏற்கனவே முறிஞ்சதால், அப்புறப்படுத்தினோம்னு அறங்காவலர்கள் விளக்கம் கொடுத்தாங்களாம்,''
'பறக்காத' படை அலுவலர்கள் கவலை
''மித்து, இந்த வாரம் 10ம் வகுப்புக்கு எக்ஸாம் துவங்குது. தேர்வு எழுதும் மாணவர்களை கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படை அலுவலர்களுக்கு, இதுவரை வாகனம் ஏற்பாடு செய்யலையாம். இதுபற்றி கேட்டால், 'எப்.சி.,'க்கு போன வண்டி வரலை. இப்போதைக்கு உங்ககிட்ட இருக்கிற வண்டியை ஓட்டி, பில் வையுங்க. அப்புறம் பாத்துக்கலாம்,' என்று சொன்னார்களாம். அதுக்கு, பறக்கும் படையினர், 'மூனு மாசம் முன்னாடி இருந்து சொல்லிட்டு தான் இருக்கோம். ஆனா, அசையவே மாட்டேங்கிறாங்க,'ன்னு பறக்கும் படை அதிகாரிகள், புலம்பறாங்களாம்...''
போதை கும்பல் அட்டகாசம்
''வீரபாண்டி பகுதியில திருவள்ளுவர் நகர், பாரதிதாசன் நகர் போன்ற குடியிருப்பு ஏரியாவில், ராத்திரி, பகல்னு எந்நேரமும், 'குடி'மகன்கள் அட்டகாசம் தலைவிரித்தாடுகிறது. பல்லடம் ரோடு மதுக்கடையில், 'சரக்கு' வாங்கிட்டு, வீடு மற்றும் தோட்டங்களுக்குச் செல்லும் வழியில் கும்பலாக அமர்ந்து குடிச்சு கும்மாளமிடுகின்றனர். அதிலும், சிலர் கஞ்சா அடிச்சிட்டு, பிரச்னை பண்றாங்களாம். யாராவது கேட்டால் மிரட்டல் விடுக்கின்றனராம். பல்லடத்தில் நடந்தது போல் இங்கும் ஏதாவது விபரீதமாக ஏற்படும் முன் போலீசார் கொஞ்சம் கண்டுகொண்டால் பரவாயில்ல...'' என்று சொன்ன சித்ரா, ''இதே மாதிரி, குமார் நகர், முருங்கப்பாளையம் அரசு ஊழியர் குடியிருப்பு டேமேஜ் ஆனதால, பலரும் காலி செய்து விட்டனர். கேட்பாரற்று கிடக்கும் இந்த வீடுகளில் ராத்திரிகளில், போதை ஆசாமிகளின் நடமாட்டம் அதிகமா இருக்குதாம். இதனால, அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் பயத்திலேயே வாழ்கின்றனர்,'' என கூடுதல் தகவல் சொன்னாள்.
உளவு பார்க்காத ஒற்றர் படை
''பஞ்சாப் மாநிலத்தில விவசாயிகள் மீதான நடவடிக்கையை கண்டிச்சு, திருப்பூரில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தை அறிவிச்சாங்க. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டும் கூட, கண்காணிப்பையும் மீறி, பயணிகளோடு, பயணிகளாக கலந்துட்ட விவசாயிகள் இன்டர்சிட்டி ரயில் வந்தவுடன், தண்டவாளத்தில் இறங்கிட்டாங்க,''