
முதல் கேள்வி
இந்திய சுற்றுச்சூழல் சட்டப்படி, ஒரு உயிரினத்தின் மரபணுவிற்குள் செய்யப்படும் எல்லாவித வேலைகளும் மரபணு மாற்றமே!
இரண்டாம் கேள்வி
மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை, உயிரியல் பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தி, ஆபத்தில்லாதவை என்று நிரூபிக்க வேண்டும் என்கிறது நமது சட்டம். 'மரபணு திருத்தம்' என்ற வார்த்தை ஜாலத்தால், இதை தவிர்த்திருக்கிறது மத்திய அரசு.
மூன்றாம் கேள்வி
புதிய நெல் ரகங்கள் 25 சதவீதம் அதிக விளைச்சலை கொடுக்கும் என்கிறார்கள். ஆனால், இந்த அதிக விளைச்சல் நம் நாட்டிற்கு தேவையா? உலகளவில் நெல் உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கிறோம். நம் தேவையை விட மூன்று மடங்கு அதிகம் உற்பத்தி செய்கிறோம்.
நான்காம் கேள்வி
' மரபணு திருத்தப்பட்ட' நெல் ரகங்களால் தண்ணீர் தேவை குறையும், நெல் விளைச்சலின் போது வெளியேறும் மீத்தேன் வாயு குறையும் என்கிறார்கள். அரசு ஏற்கனவே ஊக்குவித்து வரும் திருந்திய நெல் சாகுபடி முறையில், தண்ணீர் தேவை 40 சதவீதம் குறைகிறது, மீத்தேன் வாயு வெளியேற்றம் 19 சதவீதம் குறைகிறது, விளைச்சலும் 25 முதல் 80 சதவீதம் அதிகரிக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டவை. நன்கு வேலை செய்யும் வழிமுறை கையில் இருக்க ஆபத்தான வழி எதற்கு?
ஐந்தாம் கேள்வி
புதிய நெல் ரகங்கள் உப்பு தன்மையை தாங்கி வளரும் என்கிறார்கள். உப்பு தன்மையை தாங்கி நன்கு விளையும் பாரம்பரிய நெல் இரகங்கள் தமிழகத்திலும் மற்ற மாநிலங்களிலும் பயன்பாட்டில் இருக்கிறன. அவற்றை ஒதுக்கிவிட்டு எதற்காக மரபணு மாற்றம்?
ஆறாம் கேள்வி
முதலில் அரசு நிறுவனம் வாயிலாக இந்த தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி. அதை ' சாதாரணமாக' மாற்றி. மெல்ல மெல்ல கார்ப்பரேட்களும் இந்த தொழில்நுட்பத்தில் விதைகளை வெளியிடுவதற்கான சதி வேலையோ என நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது?
ஏழாம் கேள்வி
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி, வேளாண்மையும், மக்களின் உடல் நலனும் மாநில அரசுகளின் அதிகார வரம்பில் உள்ளவை. மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல், தன்னிச்சையாக மரபணு மாற்றப்பட்ட/திருத்தப்பட்ட பயிர்களில் முடிவெடுப்பது என்பது இந்தியக் கூட்டாட்சி அமைப்புக்கு எதிரானது. இருப்பினும் இந்த ரகங்கள் மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் வெளியிடப்பட்டு உள்ளன. இது பற்றி மாநில அரசுகள் கேள்வி எழுப்பாதது ஏன்?
வருகிறது சுனாமி
நெல்லை தொடர்ந்து காஷ்மீரில் செம்மறி ஆட்டின் மரபணு திருத்தம் செய்யப்பட்டு உள்ளது.