/வாராவாரம்/சிந்தனைக் களம்/ புதிய பாரதத்தின் தத்துவஞானி தீன்தயாள் உபாத்யாயா! புதிய பாரதத்தின் தத்துவஞானி தீன்தயாள் உபாத்யாயா!
புதிய பாரதத்தின் தத்துவஞானி தீன்தயாள் உபாத்யாயா!
புதிய பாரதத்தின் தத்துவஞானி தீன்தயாள் உபாத்யாயா!
புதிய பாரதத்தின் தத்துவஞானி தீன்தயாள் உபாத்யாயா!

இளமைக் காலம்
பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா, உத்தர பிரதேச மாநிலம், மதுரா மாவட்டத்தில் உள்ள நாக்லா சந்தரபான் என்ற கிராமத்தில் மிகச் சாதாரண குடும்பத்தில் 1916 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் நாள் பிறந்தார். மூன்று வயதிற்குள் தந்தையையும், ஏழு வயதிற்குள் தாயாரையும் இழந்த தீன்தயாள், ரயில்வே துறையில் பணிபுரிந்த தன் தாய்மாமன் ராதாராமனின் அரவணைப்பில் வளர்ந்தார்.
வறுமையான குடும்ப சூழலில் வீட்டு வேலைகளையும் கவனித்துக் கொண்டு படித்தார். பத்தாம் வகுப்பு மற்றும் பள்ளி மேல்நிலைக்கல்வித் தேர்வில் மிக அதிக மதிப்பெண்கள் பெற்றதற்காக கல்வி உதவித்தொகையும் பெற்றார்.
சமூக வாழ்க்கை
ஆர்.எஸ்.எஸ்.,சைத் தோற்றுவித்த டாக்டர் ஹெட்கேவர் மற்றும் நானாஜியால் பெரிதும் கவரப்பட்டு, 1942 முதல் முழு நேர ஊழியராக மாறினார். கடந்த, 1951ல் டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியால் துவக்கப்பட்ட 'ஜனசங்கம்' என்ற அரசியல் இயக்கத்தில் சேர்ந்தார். 1952ல் ஜனசங்கத்தின் தேசியச் செயலராக நியமிக்கப்பட்டார்.
மனிதநேய சித்தாந்தம்
பிரதமர் மோடி, தீன் தயாள் உபாத்யாயா சொல்லிக் கொடுத்த மனித நேயத்தைக் கடைப்பிடித்து வருகிறார். தற்போது செயல்பட்டு வரும் தேசிய புதிய கல்விக் கொள்கை, புதிய சுகாதாரக் கொள்கை, பொது சிவில் சட்டம், புதிய வேளாண் சட்டங்கள், குடியுரிமைத் திருத்த மசோதா, ஆத்மநிர்பர் பாரத், மேக் இன் இந்தியா, ஸ்டார்ட்அப் இந்தியா, துாய்மை இந்தியா போன்ற அனைத்துக் கொள்கைகளுக்கும், சட்டங்களுக்கும், திட்டங்களுக்கும் ஆதாரமாக இருப்பது, இக்கோட்பாடே!
இவர் மனிதனுக்குத் தேவையான தர்மம், காமம், அர்த்தம், மோட்சம் என்ற நான்கு புருஷார்த்தங்களை இன்றைய சமூக- பொருளாதார பிரச்னைகளுடன் தொடர்பு படுத்தி விவரித்தார்