Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

ADDED : ஜூலை 22, 2019 10:45 AM


Google News
Latest Tamil News
பாரமாய பழவினை பற்றறுத்து என்னைத் தன்

வாரமாக்கி வைத்தான் வைத்ததன்றி என்னுள் புகுந்தான்

கோரமாதவம் செய்தனன்கொல் அறியேன் அரங்கத்தம்மான் திரு

வார மார்பதன்றோ அடியேனை ஆட்கொண்டதே.

(திருப்பாணாழ்வார் பாடிய பாசுரம்)

பொருள்: முற்பிறவிகளில் செய்த வினைகளின் பாரத்தை போக்கி, என்னை குத்தகைக்கு எடுத்துக் கொண்டான். அதுமட்டுமின்றி என்னுள் புகுந்து விட்டான். நான் என்ன தவம் செய்தேனோ தெரியவில்லை. அரங்கத்து அம்மானின் மாலை சூடியிருக்கும் திருமார்பு என்னை ஆட்கொண்டு விட்டதே!




      Our Apps Available On




      Dinamalar

      Follow us