காதல் இல்லாத அனைத்தும் அர்த்தமற்றது : திரிஷாவின் திடீர் தத்துவம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. தெலுங்கு, மலையாளம் படங்களிலும் நடித்துள்ள இவர் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பயணித்து வருகிறார். 42 வயதை கடந்த திரிஷா இன்னும் திருமணம் செய்யவில்லை. சில நடிகர்களுடன் காதல் கிசுகிசுவில் சிக்கினார். வருண் மணியன் என்பவருடன்நிச்சயதார்த்தம் நடந்து, திருமணம் நின்று போனது.
தற்போது சூர்யாவின் கருப்பு படத்தில் நடித்துள்ளார். அடுத்த மாதம் படம் ரிலீஸாகிறது. சமீபகாலமாகவே சர்ச்சை நடிகையாகி இருக்கிறார் திரிஷா. விஜய் உடனான நெருக்கம், அதை வைத்து அரசியல் பிரபலங்கள் விமர்சனம், விஜய்யுடன் ஜோடியாக திருமணத்திற்கு சென்றது. வளர்ப்பு நாயை கோவிலுக்குள் அழைத்துச் சென்றது என அடுத்தடுத்த சர்ச்சைகளை உருவாக்கி வருகிறார்.
இந்நிலையில் திரிஷா தனது இன்ஸ்டாவில் கூறியுள்ள காதல் தத்துவம் வைரலாகி உள்ளது. அதில் “காதல் மட்டுமே எல்லாமும் அல்ல, ஆனால், காதல் இல்லாமல் அனைத்தும் அர்த்தமற்றது” என்று பதிவிட்டுள்ளார்.