முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு ஆக.7க்கு ஒத்திவைப்பு
ADDED : 2 hours ago
தவெக தலைவரும், முதல்வருமான விஜய்யின் மனைவி சங்கீதா, விவாகரத்து கோரி கடந்த 2025ம் ஆண்டு டிச.24ம் தேதி செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தமக்கு விவாகரத்தும், நிரந்தர ஜீவனாம்சமும் வேண்டும் என்று சங்கீதா கோரியிருந்தார்.
இந்த வழக்கானது பிப்.26ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு, செங்கல்பட்டு முதலாவது குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த வழக்கு இன்று (ஜூன் 15) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது இருதரப்பு வழக்கறிஞர்கள் ஆன்லைனில் விசாரணைக்கு ஆஜராக கோரிக்கை விடுத்தனர். வீடியோ கான்பரன்சிங் விசாரணை இல்லை என கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. ஆகஸ்ட் 7ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.