Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 16 பேர் சரண்; கெர்லபெண்டா நக்சல்கள் இல்லாத கிராமமாக மாறியது!

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 16 பேர் சரண்; கெர்லபெண்டா நக்சல்கள் இல்லாத கிராமமாக மாறியது!

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 16 பேர் சரண்; கெர்லபெண்டா நக்சல்கள் இல்லாத கிராமமாக மாறியது!

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 16 பேர் சரண்; கெர்லபெண்டா நக்சல்கள் இல்லாத கிராமமாக மாறியது!

UPDATED : ஜூன் 02, 2025 03:36 PMADDED : ஜூன் 02, 2025 03:34 PM


Google News
Latest Tamil News
ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் நக்சலைட்கள் 16 பேர் இன்று ( ஜூன் 02) போலீசாரிடம் சரண் அடைந்தனர். கெர்லபெண்டா நக்சல்கள் இல்லாத கிராமமாக மாறியது என போலீசார் தெரிவித்தனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் அண்மைக்காலமாக நக்சலைட்டுகளின் தாக்குதல்களை பாதுகாப்பு படையினர் முறியடித்து வருகின்றனர். பாதுகாப்பு படையினர் நக்சலைட்களை துல்லியமாக சுட்டு வீழ்த்தி வருகின்றனர். இதனால் அங்கு தலைமறைவாக இருக்கும் பல நக்சலைட்டுகள் சரண் அடையும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில் இன்று சுக்மா மாவட்டத்தில் பெண் உட்பட நக்சலைட்கள் 16 பேர் போலீசாரிடம் சரண் அடைந்தனர். இவர்களில் 9 பேர் கெர்லபெண்டா கிராமத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் சரண் அடைந்ததன் மூலம், கெர்லபெண்டா நக்சல்கள் இல்லாத கிராமமாக மாறியது என போலீசார் தெரிவித்தனர்.

தற்போது, அந்த கிராமத்தை மேம்படுத்த ரூ.1 கோடி மதிப்புள்ள நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த கிராமத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us