Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/காஷ்மீரில் பயங்கரவாதிகளை வேட்டையாட போகும் கமாண்டோ படை வீரர்கள்!

காஷ்மீரில் பயங்கரவாதிகளை வேட்டையாட போகும் கமாண்டோ படை வீரர்கள்!

காஷ்மீரில் பயங்கரவாதிகளை வேட்டையாட போகும் கமாண்டோ படை வீரர்கள்!

காஷ்மீரில் பயங்கரவாதிகளை வேட்டையாட போகும் கமாண்டோ படை வீரர்கள்!

ADDED : ஜூலை 20, 2024 03:47 PM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பயங்கரவாதிகளை ஒடுக்க, சிறப்பு பயிற்சி பெற்ற 500 கமாண்டோ படை வீரர்களை இந்திய ராணுவம் களமிறக்கி உள்ளது.

இது தொடர்பாக பாதுகாப்பு துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது: காஷ்மீரில் பயங்கரவாதத்தை மீண்டும் தூண்டிவிடவும், தாக்குதல் நடத்தவும் பாகிஸ்தானில் நன்கு பயிற்சி பெற்ற 55 பயங்கரவாதிகள் அம்மாநிலத்திற்குள் ஊடுருவி உள்ளனர். அவர்களை வேட்டையாடுவதற்காக சிறப்பு பயிற்சி பெற்ற கமாண்டோ படை வீரர்கள் 500 பேரை இந்திய ராணுவம் களமிறக்கி உள்ளது.

காஷ்மீரில், உளவுத்துறையும் தனது கட்டமைப்பை வலுப்படுத்தி உள்ளதுடன், பயங்கரவாதிகளின் உள்கட்டமைப்பு மற்றும் அவர்களின் ஆதரவாளர்களை ஒழிக்கவும் பணியாற்றி வருகிறது.

பாகிஸ்தானின் மறைமுக போருக்கு பதிலடி கொடுப்பதற்காக 4 ஆயிரம் வீரர்களை காஷ்மீருக்கு ராணுவம் கொண்டு வந்துள்ளது. நவீன ஆயுதங்கள் மற்றும் தொலைத் தொடர்பு சாதனங்களுடன் பதுங்கி உள்ள பயங்கரவாதிகளை கண்டறிந்து ஒழிக்கும் பணியிலும் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us