மாணவர்களுக்கு இரண்டாம் பருவ பாடப்புத்தகங்கள் தயார்
மாணவர்களுக்கு இரண்டாம் பருவ பாடப்புத்தகங்கள் தயார்
UPDATED : செப் 24, 2015 12:00 AM
ADDED : செப் 24, 2015 10:41 AM
அ நிறம் | அளவு
விருதுநகர்
: மாவட்டத்தில் 6 முதல்9ம்
வகுப்பு மாணவர்கள் 1,29,100 பேருக்கு இரண்டாம்
பருவ இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன.
மாவட்டத்தில் காலாண்டுத்தேர்வு விடுமுறை முடிந்து அக்.,5ல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. அதே நாளில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்பு படிக்கும் விருதுநகர் கல்விமாவட்டத்தைச் சேர்ந்த 44,100 பேர், அருப்புக்கோட்டை கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த 40,600 பேர், ஸ்ரீவி.,கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த 44,400 பேர் என 1,29,100 மாணவர்களுக்கு அரசின் இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. அவை தற்போது பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
