Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மாமியார் மாயம் மருமகள் புகார்

மாமியார் மாயம் மருமகள் புகார்

மாமியார் மாயம் மருமகள் புகார்

மாமியார் மாயம் மருமகள் புகார்

ADDED : ஜூலை 17, 2024 12:27 AM


Google News
அரியாங்குப்பம் : மருத்துவ சிகிச்சைக்காக வந்த மாமியாரை காணவில்லை என மருமகள் போலீசில் புகார் செய்தார்.

அரியாங்குப்பம் அரவிந்தர் நகர், டோல்கேட் பகுதியை சேர்ந்தவர் ஜெயந்தி. இவரது மாமியார் சரோஜா, 83; இவர் காரைக்காலில் வசித்து வந்தார். அவருக்கு உடல்நிலை மற்றும் மனநிலை சரியில்லாமல் இருந்ததால், புதுச்சேரி மருத்துவனையில் சிகிச்சை அளிப்பதற்காக, அவரை கடந்த 12ம் தேதி காரைக்காலில் இருந்து ஜெயந்தி அழைத்து வந்தார்.

இந்நிலையில், வீட்டில் படுத்திருந்த அவரை நேற்று காலையில் எழுந்து பார்க்கும் போது, அவரை காணவில்லை, உறவினர்கள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

புகாரின் பேரில், அரியாங்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us