/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சிகிச்சையில் இருந்த மூதாட்டி மரணம் உறவினர்கள் முற்றுகையால் பரபரப்பு சிகிச்சையில் இருந்த மூதாட்டி மரணம் உறவினர்கள் முற்றுகையால் பரபரப்பு
சிகிச்சையில் இருந்த மூதாட்டி மரணம் உறவினர்கள் முற்றுகையால் பரபரப்பு
சிகிச்சையில் இருந்த மூதாட்டி மரணம் உறவினர்கள் முற்றுகையால் பரபரப்பு
சிகிச்சையில் இருந்த மூதாட்டி மரணம் உறவினர்கள் முற்றுகையால் பரபரப்பு
ADDED : செப் 24, 2025 06:14 AM

புதுச்சேரி : அரியாங்குப்பம் அடுத்த ஓடவெளியை சேர்ந்தவர் சாந்தா (எ) நீலம்மாள், 66. இவர், கடந்த 16ம் தேதி, வீட்டில் தவறி விழுந்து படுகாயமடைந்தார். உடன் அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று மதியம் 2:30 மணியளவில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
அவரது உறவினர்கள் மருத்துவமனை முன் திரண்டு,சரியான முறையில் சிகிச்சை அளிக்காததால், மூதாட்டி இறந்துள்ளார். மருத்துவமனையில், போதிய அடிப்படை வசதிகள் இல்லை எனக் கூறி , மருத்துவமனையை, முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரியக்கடைபோலீசார், பேச்சு வார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக கூறினர். அதையடுத்து, போராட்டம் செய்தவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.