Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பொது இடத்தில் தகராறு இரு வாலிபர்கள் கைது

பொது இடத்தில் தகராறு இரு வாலிபர்கள் கைது

பொது இடத்தில் தகராறு இரு வாலிபர்கள் கைது

பொது இடத்தில் தகராறு இரு வாலிபர்கள் கைது

ADDED : மே 20, 2025 11:36 PM


Google News
புதுச்சேரி : பொதுமக்களிடம் தகராறு செய்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

மேட்டுப்பாளையம் ஐ.டி.ஐ., சாலையில் நேற்று முன்தினம் இரண்டு பேர் அந்த வழியாக செல்லும் பொதுமக்களிடம் மது போதையில் தகராறு செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதையடுத்து, போலீசார் அந்த பகுதியில் சோதனை செய்தனர். அங்கு நின்றவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர், காந்தி திருநல்லுார் பகுதியை சேர்ந்த தவமணி, 43, என, தெரியவந்தது. அவரை கைது செய்தனர்.

அதே போல, வழுதாவூர் சாலையில், பொதுமக்களிடம் தகராறு செய்த மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சுந்தரவேல், 52, என்பவரை போலீசார் கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us