Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கிண்டியில் கார் மோதி தந்தை, மகன் பரிதாப பலி

 கிண்டியில் கார் மோதி தந்தை, மகன் பரிதாப பலி

 கிண்டியில் கார் மோதி தந்தை, மகன் பரிதாப பலி

 கிண்டியில் கார் மோதி தந்தை, மகன் பரிதாப பலி

ADDED : டிச 01, 2025 01:22 AM


Google News
Latest Tamil News
கிண்டி: சைதாப்பேட்டை சந்தையில் காய்கறி வாங்க சென்ற தந்தை, மகன், அடையாளம் தெரியாத கார் மோதி, நேற்று பலியாகினர்.

கிண்டி, அருளாயன்பேட்டையைச் சேர்ந்தவர் ரவி, 50. கிண்டி பல்நோக்கு மருத்துவமனை அருகே, டிபன் கடை நடத்தி வந்தார். இவருக்கு, மூன்று மகன்கள்.

இளைய மகன் கார்த்திக், 15, உடன், சைதாப்பேட்டை சந்தையில் காய்கறி வாங்க, இருசக்கர வாகனத்தில் நேற்று, ரவி புறப்பட்டார்.

கிண்டி, கல்லாற்று மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத கார், பைக்கில் மோதி நிற்காமல் பறந்தது.

இதில் துாக்கி வீசப்பட்ட தந்தை, மகன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். அடையாறு போக்குவரத்து போலீசார், கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, விபத்து ஏற்படுத்திய காரை தேடுகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us