Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ செய்திகள் சில வரிகளில்/ வடசென்னை

செய்திகள் சில வரிகளில்/ வடசென்னை

செய்திகள் சில வரிகளில்/ வடசென்னை

செய்திகள் சில வரிகளில்/ வடசென்னை

ADDED : செப் 17, 2025 12:45 AM


Google News
கட்டடத் தொழிலாளி

மயங்கி விழுந்து பலி

புளியந்தோப்பு:வியாசர்பாடி, பி - கல்யாணபுரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து, 63; கூலித் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் பெரம்பூர் பழனி முருகன் கோவில் தெருவில் உள்ள பழைய கட்டடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்து இறந்தார். இதுகுறித்து, செம்பியம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

----------------

கஞ்சா வியாபாரி கைது

ஓட்டேரி ஸ்ரீபன்சன் சாலையில், கஞ்சா விற்று வந்த, புளியந்தோப்பு நாகாத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஹரிகரன், 23 என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து, 1.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us