Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ அமைச்சர் தியாகராஜனின் ரூ.30 ஆயிரம் கோடி ஆடியோ விவகாரம் குறித்து விசாரிக்கப்படும் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி பேச்சு

அமைச்சர் தியாகராஜனின் ரூ.30 ஆயிரம் கோடி ஆடியோ விவகாரம் குறித்து விசாரிக்கப்படும் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி பேச்சு

அமைச்சர் தியாகராஜனின் ரூ.30 ஆயிரம் கோடி ஆடியோ விவகாரம் குறித்து விசாரிக்கப்படும் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி பேச்சு

அமைச்சர் தியாகராஜனின் ரூ.30 ஆயிரம் கோடி ஆடியோ விவகாரம் குறித்து விசாரிக்கப்படும் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி பேச்சு

ADDED : செப் 04, 2025 05:06 AM


Google News
மதுரை: அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த உடன் அமைச்சர் தியாகராஜன் ரூ.30 ஆயிரம் கோடி குறித்து பேசிய ஆடியோ விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்படும் என அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி பேசினார்.

மதுரை மத்திய தொகுதி டி.எம்.கோர்ட் பகுதியில் பழனிசாமி பேசியதாவது: இத்தொகுதி அமைச்சர் தியாகராஜன், 'உதயநிதி குடும்பத்தில் ரூ. 30 ஆயிரம் கோடி வைத்துக்கொண்டுஎன்ன செய்வது என தெரியாமல் உள்ளனர்' என பேசிய ஆடியோ வெளியானது. இது தொடர்பாக பல கூட்டங்களில் பேசினேன். இதற்கு முதல்வர் ஸ்டாலின் பதில் சொல்லவில்லை. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் இதுகுறித்து விசாரிக்கப்படும்.

திறமையற்ற முதல்வரால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது, வியாபாரிகள் நிம்மதியாக இருக்க வேண்டும் என்றால் அ.தி.மு.க., ஆட்சிக்கு வரவேண்டும். தமிழகத்தில் தற்போது ஓய்வு பெற்ற டி.ஜி.பி., கஞ்சாவை ஒழிக்க 2.0, 3.0 4.0 என திட்டங்கள் போட்டு கடைசியில் 'ஓ...' போட்டு ஓய்வில் சென்று விட்டார். பா.ஜ.,வுடன் தி.மு.க., ஏற்கனவே இரண்டுமுறை கூட்டணி வைத்துள்ளது. ஆனால் அ.தி.மு.க., வைத்தால் சிறுபான்மையினர் பாதிக்கப்படுவர் என தி.மு.க., பொய் பிரசாரம் செய்கிறது.

சமூக நீதியை காப்போம் என தி.மு.க., சொல்கிறது. ஆனால் திண்டிவனம், சேலம் மாவட்டங்களில் பட்டியலின அதிகாரிகள் தி.மு.க.,வினரால் அவமானப்படுத்தப்பட்டனர். கூட்டணியில் உள்ள வி.சி., கொடியை மதுரையில் ஒரு இடத்தில் கூட வைக்க அனுமதிக்கவில்லை. இதை நான் சொன்னால் பழனிசாமி கூட்டணியை உடைக்க பார்க்கிறார் என திருமாவளவன் விமர்சிப்பார். திருமாவளவனே நீங்க உஷாராக இல்லை என்றால் உங்கள் கட்சியை தி.மு.க., அபகரித்துவிடும். எச்சரிக்கையாக இருங்கள்.

மாநகராட்சி முறைகேடு குறித்து மதுரை மார்க்சிஸ்ட் எம்.பி.,வெங்கடேசன் இதுவரை குரல் கொடுக்கவில்லை. குரல் கொடுத்தால் வரும் சட்டசபை தேர்தலில் கூட்டணியை விட்டு வெளியேற்றி விடுவர். இதனால் அக்கட்சி ஒரு போராட்டம் கூட நடத்தவில்லை.

மத்திய தொகுதியில் அ.தி.மு.க., ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் உட்பட ஏராளமான திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. வெளிநாடுகளுக்கு முதலீடுகளை ஈர்க்க போகும் முதல்வருக்கு, இங்குள்ள பெரியாறு பஸ்ஸ்டாண்ட் வணிக வளாகத்தை திறக்க நேரமில்லை. இவ்வாறு பேசினார்.

நிகழ்ச்சிகளில் முன்னாள் அமைச்சர்கள் செல்லுார் ராஜூ, உதயகுமார், ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ., மாவட்ட பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் வளர்மதி, முன்னாள் எம்.எல்.ஏ., டாக்டர் சரவணன், மேற்கு சட்டசபை தொகுதி 4ம் பகுதி செயலாளர் முத்துவேல், 3ம் பகுதி செயலாளர் கருப்பசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., எஸ்.எஸ்., சரவணன், மத்திய தொகுதி முன்னாள் பகுதி செயலாளர் மா.ஜெயபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us