Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ லண்டன் தமிழ் சங்க விருது வழங்கும் விழா

லண்டன் தமிழ் சங்க விருது வழங்கும் விழா

லண்டன் தமிழ் சங்க விருது வழங்கும் விழா

லண்டன் தமிழ் சங்க விருது வழங்கும் விழா

ADDED : ஜூன் 23, 2025 09:10 AM


Google News
Latest Tamil News
கம்பம்: தேசிய செட்டியார்கள் பேரவையின் நிறுவன தலைவர் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா. இவர் பல்வேறு சமூக சேவைகள் செய்து வருகிறார். 2019 முதல் 2023 வரை கொரோனா காலத்தில் தமிழகம், கேரளாவை சேர்ந்த பொது மக்களுக்கு அரிசி, உடைகள், மருத்துவ உதவிகளும், அரசு மருத்துவமனைகளுக்கு பல்வேறு மருத்துவ உபகரணங்களை வழங்கினார்.

அதே போல தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் எழுதிய நுால்களை முன்னின்று வெளியிட்டு உதவியுள்ளார். இச்சமூக சேவைகளை பாராட்டி லண்டன் தமிழ் சங்கத்தின் சார்பில் இங்கிலாந்து நாட்டின் நாடாளுமன்றத்தில் வைத்து, 'மனித நேயர்' விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் துணை மேயர் அப்பு தாமோதரன், தமிழ்ச்சங்க தலைவர் டாக்டர் பாட்டழகன், இங்கிலாந்து நாட்டின் எரிசக்தி பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் சாரா ஜோன்ஸ் ஆகியோர் இணைந்து ஜெகநாத்மிஸ்ராவிற்கு விருது வழங்கினர். நாடாளுமன்ற உறுப்பினர் ஜிம் டிச்சன், ஜோசன் ஜாஸ் அத்வால், புளோரன்ஸ் யெஸ்லோமி உள்ளிட்ட அந்நாட்டின் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us