
நிர்வாகிகள் பதவியேற்பு
சுடுகாடு சுத்தமாகுமா?
கொடுவாய், கோட்டைமேடு பகுதியில் நுாற்றுக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு குடியிருப்பு அருகிலேயே சுடுகாடு உள்ளது. சுடுகாட்டின் பாதி பகுதியை ஊராட்சி நிர்வாகம் குப்பை கொட்டும் இடமாக பயன்படுத்தி வருகிறது. மீதியுள்ள பகுதியில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து முட்புதர் மண்டி கிடக்கிறது. அது பாம்புகள் குடியிருக்கும் பகுதியாக மாறி வருகிறது. இறந்தவர்களை அடக்கம் செய்ய அப்பகுதி மக்கள் பெரும் துயரத்தை எதிர்கொள்கின்றனர். எனவே முட்புதர்களை அகற்றி சுடுகாட்டை சுத்தம் செய்ய ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
விழிப்புணர்வு வாசகம்
கருகும் மரக்கன்றுகள்
பல்லடம் ஒன்றியம், வடுகபாளையம் புதுார் - சித்தம்பலம் செல்லும் ரோட்டில், நுாற்றுக்கணக்கான மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. போதிய பராமரிப்புகள் இன்றி, மரக்கன்றுகள் காய்ந்து கருகி வருகின்றன. பல மாதங்களுக்கு முன் நடவு செய்யப்பட்ட மரக்கன்றுகள், துளிர்விட்டு கிளைகள் விடாமல், இலைகள் உதிர்ந்து, குச்சிகளாக மட்டுமே நிற்கின்றன. மரக்கன்றுகள் நடுவதுடன் பணிகள் முடிந்தது என்று கருதாமல், அவற்றை முறையாக பராமரிக்க வேண்டும். எனவே, மீதமுள்ள மரக்கன்றுகளையாவது பராமரித்து பாதுகாக்க உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பசுமை ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.