Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ சாராய வியாபாரி தடுப்பு காவலில் கைது

சாராய வியாபாரி தடுப்பு காவலில் கைது

சாராய வியாபாரி தடுப்பு காவலில் கைது

சாராய வியாபாரி தடுப்பு காவலில் கைது

ADDED : ஜூலை 25, 2024 06:27 AM


Google News
Latest Tamil News
விழுப்புரம்: வளவனுார் அருகே தொடர் சாராய விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்தனர்.

வளவனுார் அருகே ஜெகநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் மகன் தினகரன்,30; இவர், கடந்த ஜூன் 26ம் தேதி ஜெகநாதபுரம் ஆற்றுப்பாலம் அருகே சாராய விற்பனை செய்த போது, வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்து, கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.

இவர் மீது, வளவனுார் போலீஸ் ஸ்டேஷனில், சாராயம் விற்பனை, கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இவரது நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு, தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி., தீபக் சிவாச், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

கலெக்டர் பழனி அளித்த உத்தரவின் பேரில், வளவனுார் போலீசார் தினகரனை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கான உத்தரவு நகலை, கடலுார் மத்திய சிறையில் வழங்கினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us