ADDED : ஜூலை 16, 2024 04:26 AM
அருப்புக்கோட்டை, : அருப்புக்கோட்டை அருகே கமுதியை சேர்ந்தவர் ஐயப்பன்,46, இவர் கட்ட வேலை சப் கான்ட்ராக்டர். அருப்புக்கோட்டை அருகே கோபாலபுரம் பஸ் ஸ்டாப் அருகே தடுப்பு சுவர் அமைக்கும் பணிக்காக அதற்கு போல்ட்டுகளை போட்டு வேலை செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு அங்கு வைத்திருந்த இரும்பு போல்ட்டுகளை இருவர் திருடிச் செல்ல முயன்றனர்.
அவர்களை பிடித்து விசாரித்ததில் திருச்சுழி எர்ரம் பட்டியை சேர்ந்த சோனைமுத்து, வீராச்சாமி என தெரிய வந்தது. இருவரையும் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.- - -