Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

rasi

மேஷம்

(வரும் 2.12.2012 ஞாயிறு, காலை 10.36 மணிக்கு, ராகு விருச்சிகத்தில் இருந்து துலாமிற்கும், கேது ரிஷபத்தில் இருந்து மேஷத்திற்கும் பெயர்ச்சியாகின்றனர். இவர்கள் 21.6.2014 வரை இந்த ராசிகளில் செயல்படுவர்.)

உழைப்பில் ஆர்வம் காட்டும் மேஷராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் ராகுவும் ராசியில் கேதுவும் இடம் பெற்றுள்ளனர். ராகுவின் 3, 11ம் பார்வை முறையே பாக்யம், பூர்வ புண்ணிய ஸ்தானங்களில் பதிகிறது. கேதுவின் 3, 11ம் பார்வை முறையே புகழ் மற்றும் ஆதாய ஸ்தானங்களில் பதிகிறது. இது அனுகூலக் குறைவாக இருந்தாலும் பார்வை பலம் சில நல்ல மாற்றங்களைத் தரும். ராசியில் கேது உள்ளதால் ஆன்மிக எண்ணம் வளரும். ஆனால், பணத்தட்டுப்பாடு குறித்த கவலை ஏற்படும். வீடு, வாகனத்தில் பராமரிப்புச் செலவு அதிகரிக்கும். புத்திரர்கள் சகவாச தோஷத்தால், படிப்பில் பின்தங்கும் கிரகநிலை உள்ளது. கவனித்து வழிநடத்துவதால் சிரமம் குறைந்து படிப்பில் முன்னேற்றம் காண்பர்.குடும்பத்தின் முக்கிய செலவுக்காக சொத்தின் பேரில் கடன் பெறுகிற சூழ்நிலை இருக்கும். வெற்றி இலக்கை அடைய ஒரு முறைக்கு இருமுறை முயற்சி, செயல்பாடு தேவைப்படும். உடல்நலம் நன்றாக இருக்கும்.தம்பதியர் ஒற்றுமை சீராக இருக்க விட்டுக்கொடுக்க வேண்டும். சிறு சச்சரவுகளை நண்பர், உறவினர்கள் பெரிதுபடுத்தும் சூழல் உள்ளது. சிலர் குடும்பத்தை பிரிந்து வெளியூரில் தங்க நேரிடலாம்.

தொழிலதிபர்கள்: திட்டமிட்ட உற்பத்தி, இலக்கை அடைய கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். நிர்வாகச்செலவு அதிகரிக்கும். போட்டியாளர்கள் மூலம் வரும் சிரமங்களை புதிய யுக்தியால் சரிசெய்வதால் அதிக ஒப்பந்தம் கிடைக்கும்.

வியாபாரிகள்: அதிக போட்டியை எதிர்கொள்வீர்கள். லாபம் குறைத்து விற்பனை செய்ய வேண்டியிருக்கும். லாபம் சுமார் தான். பணப்பரிவர்த்தனை, சரக்கு பாதுகாப்பில் பாதுகாப்பு வேண்டும். அளவான மூலதனம் இட்டால் போதும். கடும் உழைப்பே விற்பனை யைத் தக்க வைக்கும்.

பணியாளர்கள்: அரசு, தனியார் துறை பணியாளர்கள், சக பணியாளர் செய்கிற குளறுபடியினால் தமது வேலையில் பாதிப்பு அடைவர். இதனால் பணி மாற்றம், பணியிட மாற்றம் ஏற்படலாம். சிரம சூழ்நிலையிலும் கூடுதல் பொறுப்புணர்வு டன் செயல்படுபவர்களில், சிலருக்கு அதிர்ஷ்டவசமாக சலுகை, பதவி உயர்வு கிடைக்கும். வேலை நேரத்தில் மாற்றம் ஏற்படும்.வீடு,வாகனம் வாங்க நிதியுதவி கிடைக்கும்.

பெண்கள்: பணி புரியும் பெண்களுக்கு பணியில் குளறுபடியும், தாமதமும் ஏற்படும். குடும்பப் பெண்கள் வீட்டுச்செலவு தட்டுப்பாட்டை சந்திப்பர். சுயதொழில் புரியும் பெண்கள் தொழில் அபிவிருத்தி கடன் பெற சிரமப்பட வேண்டியிருக்கும். லாபம் சுமார்.

மாணவர்கள்: ஆசிரியரின் வழிகாட்டுதலை கவனமுடன் பின்பற்றுவதால் மட்டுமே படிப்பு, பயிற்சியில் தேர்ச்சி இலக்கை அடைய முடியும். ஆடம்பரச் செலவுகளுக்காக பெற்றோரிடம் பணம் கேட்டு நிர்ப்பந்தம் செய்யக்கூடாது. நண்பர்களுடன் பேச்சில் மென்மையான அணுகுமுறை பின்பற்றுவது நல்லது.

அரசியல்வாதிகள்: திட்டங்களை நிறைவேற்ற அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைப்பதில் தாமதம் இருக்கும். ஆதரவாளர்கள் அன்பு கொள்வர். பொது விவகாரங்களில் ஒரு சார்பு நிலையை எடுத்தால், எதிரிகள் உருவாகலாம். 

விவசாயிகள்: காலத்துக்கேற்ற பயிர் செய்தால் மட்டுமே எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும். கால்நடை வளர்ப்பினால் ஓரளவு பணவரவு இருக்கும். புதிய நிலம் நம்பகமானவர்களிடம் வாங்குவது நல்லது.

பரிகாரப் பாடல்:
சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்
வேந்தனைச் செந்தமிழ் நூல் விரித்தோனை விளங்குவள்ளி
காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச்
சாந்துணைப் போது மறவாதவர்க்கு ஒரு தாழ்வில்லையே.

பரிகாரம்: முருகனை வழிபடுவதால் சிரமம் குறைந்து நன்மை வளரும்.


Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow Us