மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பவன் கல்யாண்
ADDED : 1 days ago
ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாணுக்கு சில தினங்களுக்கு முன்பு மும்பையில் தோள்பட்டையில் அறுவை சிகிச்சை நடந்தது. இரண்டு தோள்களிலும் சிக்கல் இருப்பதால் முதலில் வலது தோள்பட்டையில் அறுவை சிகிச்சை நடந்துள்ளது. இடது தோள்பட்டையில் பின்னர் நடைபெறும் எனத் தெரிகிறது.
சிகிச்சை பெற்று வந்த பவன் கல்யாணை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நேரில் சென்று நலம் விசாரித்திருந்தார்கள்.
இந்நிலையில் அவர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து அவர் ஓய்வில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார். அடுத்து நான்கு மாதங்களுக்கு அவர் ஓய்வெடுப்பார் எனத் தெரிகிறது. பவன் கல்யாணை அவரது மனைவி அன்னா உடனிருந்து கவனித்துக் கொண்டு வருகிறார்.