பல ஆண்டுகளுக்குப் பிறகு சினிமாவில் ஐயப்பன் பக்தி பாடல்
சர்வதா சினி கரேஜ் மற்றும் ஷிமோகா கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் சார்பில் மதுசூதன் ராவ், வி.விவேகானந்தன் மற்றும் ராமசாமி வேலு ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் 'சன்னிதானம் பிஓ'. அமுதசாரதி இயக்கியுள்ளார்.
யோகி பாபு, ரூபேஷ் ஷெட்டி மற்றும் வர்ஷா விஸ்வநாத் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் சித்தாரா, பிரமோத் ஷெட்டி, மூனார் ரமேஷ், கஜராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சுவாமி ஐயப்பனின் மகிமையை சொல்லும் சமூக படமான இந்த படத்தின் படப்பிடிப்புகள் சபரிமலை, பம்பை, எருமேலி, சென்னை மற்றும் பொள்ளாச்சி போன்ற ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த படத்தில் இடம்பெறும் 'ஏறி வந்தோம் ஐயப்பா' என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இடம் பெறும் ஐயப்பன் பக்தி பாடல் இது. சபரிமலை யாத்திரையுடன் தொடர்புடைய நம்பிக்கை மற்றும் பக்தியின் சாரத்தை காட்டும் வகையிலும், பக்தி பாடலாகவும் இது அமைந்துள்ளது. அபிஷேக் ராஜு மற்றும் விஷ்ணு ராம் ஆகியோரின் குரலில் உருவாகியுள்ள இந்த பாடலை மோகன் ராஜன் எழுதியுள்ளார். மனதை தொடும் வரிகளாலும், ஏ.ஜி.ஆர் இசையமைத்துள்ளார்.