Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தைய பதிப்புகள்

To type in English

ஆக 13, 2024

மொத்த செய்திகள்: 1354

அசுவினி:  நினைத்ததை நினைத்தபடி நடத்தும் மாதமானது இந்த ஆவணியில் நட்சத்திரநாதன் உங்களுக்கு முன்னேற்றத்தை வழங்குவார். உடல்நிலையில் உற்சாகம் தோன்றும். தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். வியாபாரம் விருத்தியாகும்.  உங்களிடமிருந்து போட்டியாளர் விலகுவார். இழுபறியாக இருந்த வேலைகளை முடிப்பீர். நீண்ட கால வழக்கு சாதகமாகும். தன ஸ்தான குருவால் குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். ஒரு சிலருக்கு புதிய பொறுப்பு கிடைக்கும். செய்துவரும் தொழிலில் நேரிடையாக கவனம் செலுத்துவீர்கள். பணியாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.  சுக்கிர பகவானால் வாய்ப்புகள் குவியும். புதிய வாகனம் வாங்குவீர். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். வேலைக்காக எதிர்பார்த்தவருக்கு நல்ல தகவல் வரும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். பெண்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும். உடல்நிலை சீராகும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் இருக்கும். விவசாயிகள் பணியில் கவனம் தேவை. பின்னர் எதிர்பார்ப்பு நிறைவேறும். வியாபாரிகள் விற்பனையில் கூடுதல் முயற்சி எடுத்து லாபம் நிலைக்கு உயருவார்கள். சந்திராஷ்டமம்: செப். 9,10.அதிர்ஷ்ட நாள்: ஆக.18,25,27. செப். 7,16.பரிகாரம் பிள்ளையார்பட்டி விநாயகரை வழிபட வாழ்வில் வளமுண்டாகும்.பரணி: எண்ணத்தில் துணிவும், செயலில் தெளிவும் கொண்ட உங்களுக்கு ஆவணி மாதம் யோகமான மாதம். நட்சத்திர நாதன் சுக்கிரனால் வரவு அதிகரிக்கும். தடைப்பட்ட வேலை நடக்கும். நீங்கள் மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். குருவும் செவ்வாயும் மூன்றாமிடத்தில் சஞ்சரிப்பதும் உங்களுக்கு யோகத்தை உண்டாக்கும். செயல்களை ஆதாயமாகும்.செல்வாக்கு உயரும். சுய தொழில் செய்து வருபவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு ஏற்படும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும். பெண்களின் நீண்டநாள் எண்ணம் நிறைவேறும். உடல்நிலை சீராகும். கணவருடன் இணக்கமான நிலை ஏற்படும். வேலையில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தில் செல்வாக்கு உண்டாகும். ஒரு சிலருக்கு புதிய பொறுப்பும் கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவதற்காக எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். போட்டி, பிரச்னை என்ற நிலை மாறி இழுபறியான வெற்றி ஏற்படும். பணவரவில் இருந்த தடை நீங்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த சங்கடம் குறையும். ஒரு சிலர் குடும்பத்தினருடன் கோயிலுக்கு சென்று வேண்டுதலை நிறைவேற்றி வருவீர்கள். சந்திராஷ்டமம்: செப்.10,11அதிஷ்ட நாள்: ஆக. 18,24,27. செப். 6,9,15.பரிகாரம் பிரத்தியங்கிராவை வழிபட பிரச்னை விலகும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.கார்த்திகை 1 ம் பாதம்:  எந்த இடத்திலும் முதன்மையாக நின்று, செய்ய நினைக்கும் வேலைகளை துணிச்சலுடன் செய்யும் உங்களுக்கு பிறக்கும் ஆவணி மாதம் முழுவதும் நட்சத்திர நாதனால் உயர்நிலையை  உயரும். குலதெய்வ அருள் பரிபூரணமாக கிடைக்கும். பூர்வீக சொத்து விவகாரத்தில் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். தைரியமும் துணிச்சலும் உண்டாகும். முயற்சியில் லாபம் தோன்றும். இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். மாதத்தின் முற்பகுதியில் பொன் பொருள் சேரும். கேதுவால் எதிர்ப்பு இல்லாமல் போகும். நினைத்ததை நினைத்தபடி செய்து முடிப்பீர். பணிபுரியும் இடத்தில் இருந்த நெருக்கடி விலகும். அரசியல்வாதிகள் தலைமையை அனுசரித்துச்செல்வீர்கள். குருவின் பார்வை உண்டாவதால் ஆரோக்கியம் சீராகும் வழக்கத்தைவிட துணிச்சலாக, தைரியமாக செயல்படுவீர். தொழிலில் இருந்த நெருக்கடி விலகும். வருமானம் அதிகரிக்கும். வேலைக்காக முயற்சித்தோரின் கனவு நனவாகும். எதிர்பார்த்த தகவல் வீடு தேடிவரும். பெண்களுக்கு குடும்பத்தில் மதிப்பு அதிகரிக்கும். வெளிநாட்டிற்கு செல்ல முயற்சித்தோரின் விருப்பம் நிறைவேறும். விவசாயத்தில் அக்கறை அதிகரிக்கும். மாணவர்கள் ஆசிரியர்களின் ஆலோசனைகளை ஏற்று செயல்படுவது நல்லது.சந்திராஷ்டமம்: செப்டம்பர் 11.அதிர்ஷ்ட நாள்: ஆக. 18,19,27,28. ஆக. 1,9,10.பரிகாரம்: நவக்கிரக வழிபாட்டால் நன்மை உண்டாகும்.
கார்த்திகை 2,3,4 ம் பாதம்:  தனித்துவமாக திகழும் உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் யோகமான மாதம். சூரியனால் பொறுப்பு கூடும். வேலை பளு அதிகரிக்கும். பணிபுரிபவர்களுடன் ஒரு இடைவெளி ஏற்படும். அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. அரசியல்வாதிகளுக்கு நன்மை அதிகரிக்கும். சுக்கிரனால் பணவரவு திருப்திதரும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலையில் இருந்த நெருக்கடி விலகும். முயற்சியில் வெற்றி உண்டாகும். யோகக்காரகன் ராகு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை உயரும். வரவேண்டிய பணம் வீடு தேடிவரும். பணியாளர்களால் லாபம் அதிகரிக்கும். பிற மொழியினர், இனத்தினர் உங்கள் முயற்சிக்கு உறுதுணையாக இருப்பர். முடங்கிக் கிடந்த தொழில் முன்னேற்றமடையும். குருவால் நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். திருமண வயதினருக்கு வரன்வரும். ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். பெண்களுக்கு கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு விலகும். தந்தை வழியில் லாபம் உண்டாகும். கோயில் வேண்டுதல்களை நிறைவேற்ற நேரம் கிடைக்கும். ஒரு சிலர் புதிய இடம் வாங்குவீர். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் வரும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. விவசாயிகள் நிலை உயரும்.சந்திராஷ்டமம்: செப்.12.அதிர்ஷ்ட நாள்: ஆக. 19,24,28. செப். 1,6,10.பரிகாரம்:  மகாலட்சுமியை வழிபட நன்மை அதிகரிக்கும். சங்கடம் நீங்கும்.ரோகிணி: தெளிவான சிந்தனையுடன் திகழும் உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் அதிர்ஷ்டமான மாதம். குரு மங்கள யோகத்தால் நினைத்த வேலைகளை நினைத்தபடி செய்து முடிப்பீர். சமூகத்தில் அந்தஸ்தும் உயரும். ஒரு சிலருக்கு பொறுப்பும் பதவியும் கிடைக்கும். குருவால்  பணியிடத்தில் இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். வெளியூர் வாசம் சிலருக்கு ஏற்படும். இதுவரை சந்தித்த பிரச்னை, சோதனை எல்லாம் விலகும். தொழில் வியாபாரத்தில் ஏற்பட்ட தடை நீங்கும். லாபம் அதிகரிக்கும். உங்கள் நிலை உயரும். திருமணம், குழந்தை பாக்கியம், சொத்து என்ற எதிர்பார்ப்பு நிறைவேறும். பெண்களுக்கு குடும்பம், வேலையில் இருந்த நெருக்கடி தீரும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு உண்டாகும். பொன் பொருள் சேரும். புதிய வாகனம் வாங்கும் முயற்சி நிறைவேறும். ராகுவால் பல வழியிலும் வருவாய் வரும். உங்கள் மனதைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படும் புதிய நட்பு அமையும். கலைஞர்கள் கனவு நனவாகும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். விவசாயிகள் எதிர்பார்ப்பு நிறைவேறும். உயர்க்கல்வி பயிலும் மாணவர்கள் வேறு சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சந்திராஷ்டமம்: செப்டம்பர் 12,13.அதிர்ஷ்ட நாள்: ஆகஸ்ட் 20,24,29. செப்டம்பர் 2,6,11,15.பரிகாரம்: குலதெய்வத்தை வழிபட உங்கள் முயற்சி வெற்றியாகும்.மிருகசீரிடம் 1, 2 ம் பாதம்: அதிர்ஷ்ட வாய்ப்புகளோடு வாழும் உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் முன்னேற்றமான மாதம். ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் குருவால் தெய்வ அருள் உண்டாக்கும். பூர்வீக சொத்துகளில் இருந்த பிரச்னை சுமுகமாக முடியும். நீண்டகாலமாக குழந்தை பாக்கியம் இல்லாமல் வருந்தி வந்தவர்களின் நிலையை மாற்றும். திருமண வயதினருக்கு பொருத்தமான வரன் வரும். நண்பர்களால் ஆதாயம் தோன்றும். இழுபறியாக இருந்த முயற்சிகளில் வெற்றி உண்டாகும். தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். செய்துவரும் தொழிலில் இருந்த தடைகள் விலகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். எதிர்பார்த்த மாற்றம் உண்டாகும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். வழக்கு விவகாரம் உங்களுக்கு சாதகமாகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். தம்பதியர்களுக்குள் அன்னியோன்யம் உண்டாகும். அரசியல்வாதிகள் நிலை உயரும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். விவசாயிகளுக்கு ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். வேலைக்காக முயற்சித்து வருபவர்களுக்கு போட்டித் தேர்வுகள் வெற்றியை உண்டாக்கும். குடும்பத்துடன் கோயிலுக்கு சென்று வருவீர்கள். சந்திராஷ்டமம்: செப். 13.அதிர்ஷட நாள்: ஆக. 18,24,27. செப். 6,9,15.பரிகாரம்: திருச்செந்தூர் முருகனை வணங்கிட வாழ்வில் வளமுண்டாகும்.
மிருகசீரிடம் 3, 4: இடைவிடா முயற்சிக்கு பெயர் பெற்ற உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் அதிர்ஷ்டம் நிறைந்த மாதம். சூரியனால் உங்கள் வாழ்வில் புதிய நம்பிக்கை உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். சட்ட சிக்கல்களில் இருந்து வெளி வருவீர்கள். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும். நட்சத்திர நாதன்  விரய ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் அங்குள்ள குருவால் குருமங்கள யோகம் உண்டாகும். செல்வாக்கு வெளிப்படும். உங்கள் ராசிநாதன் தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் புதிய சொத்து சேரும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். அதிர்ஷ்டக் காரகன் சுக்கிரனின் சஞ்சார நிலைகளும் சாதகமாக இருப்பதால் தேவைக்கேற்ற பணம் வரும். பொன், பொருள் சேரும். பொருளாதார நிலை உயரும். ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் வேலைக்காக வெளிநாடு செல்வதற்கு மேற்கொண்ட முயற்சி நிறைவேறும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் லாபம் அதிகரிக்கும். குருவின் பார்வைகள் 4,6,8 ம் இடங்களுக்கு உண்டாவதால் ஆரோக்கியம் சீராகும். விவசாயிகளுக்கு ஆதாயம் கூடும். பெண்களுக்கு இருந்த சங்கடம் நீங்கும். உயர்கல்வி பயிலும் மாணவர்கள் படிப்பில் அக்கறை செலுத்துவது நல்லது. சந்திராஷ்டமம்: ஆக. 17. செப். 14.அதிர்ஷ்ட நாள்: ஆக. 18,23,27. செப். 5,9.பரிகாரம்: கோமதியம்பிகையை வழிபட குறைகள் தீரும்.திருவாதிரை: புத்தி சாதுரியமும், திட்டமிட்டு செயல்படும் பிறக்கும் ஆவணி மாதம் முன்னேற்றமான மாதம். உங்கள் நட்சத்திரநாதனால் வியாபாரத்தில் அக்கறை அதிகரிக்கும். சம்பாத்தியத்தில் கவனம் செல்லும். தொழிலில் இருந்த தடை விலகும். பணிபுரியும் இடத்தில் திறமைக்கு மதிப்புண்டாகும். சூரியன் ஆட்சியாவதால் முயற்சி வெற்றியாகும். நீங்கள் மேற்கொண்ட வேலை நடக்கும். பிறரால் செய்ய முடியாததை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். ஒருசிலருக்கு புதிய பொறுப்பு கிடைக்கும். குருவினால் உங்கள் உடல் நிலையில் இருந்த சங்கடம் விலகும். தாய்வழி உறவுகள் ஒத்துழைப்பு ஏற்படும். இதுவரை இருந்த எதிர்ப்பு நீங்கும். தொழில் போட்டியாளர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வர். வழக்கு சாதகமாகும். செல்வாக்கு உயரும். பெண்களுக்கு குடும்பத்தில் நிம்மதி கிடைக்கும். பார்த்துவரும் வேலை, செய்துவரும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். நோய் நொடிகளால் பாதிக்கப் பட்டிருந்த கணவரின் உடல்நிலை முன்னேற்றமடையும். பொன், பொருள் சேரும். சிறு வியாபாரி, உழைப்பாளிகள் நிலை உயரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். சந்திராஷ்டமம்: ஆக. 17,18. செப்.  14,15.அதிர்ஷ்ட நாள்: ஆக. 22,23,31. செப்.  4,5,13.பரிகாரம்:  நரசிம்மரை வழிபட வேண்டுதல் நிறைவேறும்.புனர்பூசம் 1,2,3 ம் பாதம்: பிறருக்கு வழிகாட்டியாக இருக்கும் உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் ஆதாயமான மாதம்.குரு, செவ்வாயும் இணைந்து குரு மங்கள யோகம் உண்டாவதால் விருப்பம் நிறைவேறும். திட்டமிட்ட வேலையை நடத்தி முடிப்பீர்கள். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ராசிக்குள் செவ்வாய் சஞ்சரிப்பதால் செயல்களில் வேகமும் தடுமாற்றமும் ஏற்படும். குருவின் பார்வையால் இதுவரை சந்தித்த பிரச்னை மாறும். ஆரோக்கியம் சீராகும். இனி எல்லாவற்றிலும் நிம்மதி உண்டாகும். உறவினர் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி விலகும். உற்சாமுடன் செயல்படும் நிலை ஏற்படும். தடைப்பட்டிருந்த வேலை நடந்தேறும். முயற்சிகள் வெற்றியாகும். அரசியல்வாதிகள் எதிர்பார்ப்பு நிறைவேறும். புதிய பொறுப்பு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். அரசு விவகாரம் சாதகமாகும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் இப்போது உங்களிடமே உதவி கேட்டு வருவார்கள். பெண்களுக்கு வாழ்க்கைத் துணையுடன் இனக்கமான நிலை உண்டாகும். சிறு சிறு பிரச்னைகளால் பிரிந்திருந்தவர்கள் இப்போது ஒன்றிணைவீர். மாணவர்களுக்கு படிப்பின் மீது அக்கறை அதிகரிக்கும்.குலதெய்வ வழிபாடு கட்டாயம் செய்யுங்கள். சந்திராஷ்டமம்: ஆக. 19. செப்.15.அதிர்ஷ்ட நாள்: ஆக. 21,23,30. செப். 3,5,12,14.பரிகாரம்: சூரிய பகவான் வழிபாட்டினால் நன்மை அதிகரிக்கும்.
புனர்பூசம் 4 ம் பாதம்:  மனதில் தெளிவுடன் செயல்பட்டு வெற்றி காணும் உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் அதிர்ஷ்டகரமான மாதம். நட்சத்திர நாதனுடன் குரு, செவ்வாய் இணைந்திருப்பதால் எதிர்பார்ப்பு நூறு சதவிகிதம் நிறைவேறும். மகிழ்ச்சி அதிகரிக்கும். மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். தொழில், வியாபாரத்தில் ஏற்பட்ட தடை அகலும், லாபம் அதிகரிக்கும். வேலையாட்களுடன் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். உங்கள் தைரியம் மேலோங்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். குழந்தைக்காக ஏங்கிக் கொண்டிருந்தவர்கள் கவலை நீங்கும். திருமண  வயதினருக்கு தகுந்த வரன் வரும். உத்தியோகத்தில்  இருந்த நெருக்கடி நீங்கும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த உயர்வு, இடமாற்றம் போன்றவை கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு உண்டாகும். அடைபடாமல் இருந்த கடன்கள் அடையும். வீண்  செலவுகளில் கவனம் தேவை. பெண்களுக்கு குடும்பத்தில் நம்பிக்கை அதிகரிக்கும். முயற்சி வெற்றியாகும். உடல்நலனில் ஏற்பட்ட சங்கடம் விலகும். சகோதரர்கள் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பிள்ளைகள் மீது கவனம் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். விவசாயிகள் நிலையில் முன்னேற்றம் தோன்றும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் கூடும். சந்திராஷ்டமம்: ஆக. 20. செப்.16.அதிர்ஷ்ட நாள்: ஆக. 21,29,30. செப். 2,3,11,12.பரிகாரம் நவக்கிரக குரு பகவானை வழிபட வாழ்வில் வளமுண்டாகும்.பூசம்:  முயற்சிகளில் வெற்றியடைவது மட்டுமே லட்சியமாக கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஆவணி மாதம் உங்களுக்கு திருப்பு முனையான மாதம். கேதுவால் உங்கள் சுய திறன் வெளிப்படும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். சமூகம் உங்களை உணரும். குரு, சுக்கிரனால் இதுவரை இருந்த நெருக்கடி இல்லாமல் போகும். தொழில், உத்தியோகம் போன்றவற்றில் இருந்த தடை விலகி லாபம் உண்டாகும். குலதெய்வ அருளால் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். நீங்கள் யார் என்பதை நிரூபிப்பீர்கள். குரு மங்கள யோகத்தால் வருமானம் பல வழியில் வரும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர் விருப்பம் நிறைவேறும். உத்தியோகஸ்தர்கள் செல்வாக்கு உயரும். வேலை வாய்ப்பிற்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகி ஒற்றுமை அதிகரிக்கும். பெண்களுக்கு புதிய நம்பிக்கை ஏற்படும் மாங்கல்ய ஸ்தானாதிபதி வக்கிரம் அடைந்திருப்பதால் கணவருக்கிருந்த பாதிப்பு நீங்கும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும்.  குரு பார்வையால் புதிய நட்பும். திருமண வயதினருக்கு பொருத்தமான வரனும் அமையும். சொத்து சேர்க்கை உண்டாகும். அரசியல் வாதிகளுக்கு பொறுப்பு தேடிவரும். மாணவர்கள் ஆசிரியர்கள் வழிகாட்டுதலை ஏற்பது நல்லது.சந்திராஷ்டமம்: ஆக. 20,21. செப்.16.அதிர்ஷ்ட நாள்: ஆக. 17,26,29. செப். 2,8,11.பரிகாரம் சனீஸ்வரரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.ஆயில்யம்: மெல்ல மெல்ல வாழ்வில் வெற்றியடைந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் அதிர்ஷ்டம் நிறைந்த மாதம். மாதம் முழுவதும் குரு, சுக்கிரனின் சஞ்சார நிலைகளும் உங்கள் விருப்பம் நிறைவேறும். கேது உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். நீண்ட நாட்களாக தடைப்பட்டு வந்த முயற்சி இப்போது நடந்தேறும். வரவேண்டிய பணம் உங்களைத் தேடிவரும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். சிறிய முதலீட்டிலும் பெரிய லாபம் கிடைக்கும். பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். ஒரு சிலருக்கு புதிய இடம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உங்கள் வாழ்க்கையில் இருந்த சங்கடம் ஒவ்வொன்றாக விலக ஆரம்பிக்கும். சமூகத்தில் அந்தஸ்தும் செல்வாக்கும் உயரும். திருமண வயதினருக்கு வரன் வரும். குழந்தைகள் குறித்த கவலை நீங்கும். ஒரு சிலருக்கு குழந்தை பேறு உண்டாகும். வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். கூட்டுத்தொழிலில் ஆதாயம் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். இழுபறியாக இருந்த பூர்வீக சொத்து உங்கள் கைக்கு வரும். தீராமல் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை செலுத்துவது நல்லது. சந்திராஷ்டமம்: ஆக.21.அதிர்ஷ்ட நாள்: ஆக. 20,23,29. செப். 2,5,11,14.பரிகாரம்: பெருமாளை வழிபட வாழ்க்கை வளமாகும்.
மகம்: ஆத்ம பலம் கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஆவணி மாதம் நன்மையான மாதம். தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் குடும்பத்தில் குழப்பம், வரவில் தடை, கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத நிலை உண்டாகும். குரு பகவானின் பார்வையால் மாற்றம் ஏற்படும். உடல்நிலையில் முன்னேற்றம் தோன்றும். தாய்வழி உறவுகளின் ஆதரவு உண்டாகும். எதிர்பார்த்த சந்தோஷம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் தோன்றும். போட்டியாளர்கள் பாதையிலிருந்து விலகுவர். இழுபறியாக இருந்த வழக்கு முடிவிற்கு வரும். சூரியனால் தைரியமாக செயல்படத் தொடங்குவீர். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். ஒரு சிலருக்கு புதிய பொறுப்பு உண்டாகும். உங்களை அலட்சியமாக பார்த்தவர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். ஆக செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சங்கடம் விலக ஆரம்பிக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும் என்றாலும், அஷ்டம ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் ஆசைக்கு இடம் கொடுக்காமல் செயல்படுவது அவசியம். விவசாயிகளுக்கு விளைச்சலில் லாபம் ஏற்படும். மாணவர்கள் மாதத்தின் முற்பகுதியில் வேறு சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் படிப்பில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது.சந்திராஷ்டமம்:ஆக.22.அதிர்ஷ்ட நாள்: ஆக. 19,25,28. செப். 1,7,10,16.பரிகாரம்: விநாயகர் வழிபாட்டால் சங்கடம் நீங்கும்.பூரம்: நினைப்பதை சாதிக்கும் திறமை கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஆவணி மாதம் யோகமான மாதம். சுக்கிரன் மாதம் முழுவதும் ஜென்ம ராசிக்குள்ளும், தொடர்ந்து தன ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த நன்மையை அடைவீர். சமூகத்தின் பார்வைக்கு செல்வாக்கு மிக்கவராக தோன்றுவீர். குடும்பத்தில் இருந்த நெருக்கடி காணாமல் போகும். பண வரவு திருப்தி தரும். விருப்பம் எளிதாக நிறைவேறும். ஒரு சிலருக்கு புதிய சொத்து, வாகனம் சேரும். ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவினால் உத்தியோகத்தில் பாதுகாப்பு கிடைக்கும். வழக்கில் வெற்றியுண்டாகும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகி ஒற்றுமை ஏற்படும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாயால் ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், விவசாயம், உணவகங்கள், செங்கல் வியாபாரம் லாபம் தரும். ராகு அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உத்தியோகத்தில் இருப்பவர்கள் சட்டத்திற்கு உட்பட்டு நேர்மையாக செயல்படுவது நல்லது. அரசியல்வாதிகள் தலைமைக்கு கட்டுப்பட்டு செயல்படுவதால் எதிர்பார்த்த முன்னேற்றம் தாமதமாக கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது எதிர்காலத்தில் சிறந்த முன்னேற்றத்தை தரும்.சந்திராஷ்டமம்: ஆக. 23.அதிர்ஷ்ட நாள்: ஆக. 19,24,28. செப். 6,10,15.பரிகாரம்: ரங்கநாதரை வழிபட வளம் உண்டாகும்.உத்திரம் 1 ம் பாதம்: எதிலும் முதலிடம் வகிக்கும் ஆற்றல் மிக்கவராக வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதம். ராசிநாதன் ராசிக்குள்ளாகவே சஞ்சரிப்பதால் எல்லாவற்றிலும் வேகம் இருக்கும். அதிரடியாக செயல்படுவீர்கள். உங்கள் பலம் மற்றவர்களுக்கு தெரிய வரும். அதே நேரத்தில் உங்கள் அவசரச் செயல்கள் உங்களுக்கே சங்கடத்தையும் ஏற்படுத்தும். சுக்கிரனால் பொருளாதார நெருக்கடி விலகும். வரவேண்டிய பணம் வரும். தடைப்பட்டிருந்த வேலைகள் நடக்கும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும்.  லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாயால் பிரபலங்களால் நன்மை ஏற்படும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். மண்ணைத் தொட்டாலும் பொன்னாகும். குடும்ப, சுக, சத்ரு ஸ்தானங்களுக்கு குருவின் பார்வை உண்டாவதால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும். பணவரவு சந்தோஷத்தை ஏற்படுத்தும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். உடல்நிலை சீராகும். வழக்கு விவகாரம் சாதகமாகும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். ஒரு சிலர் தலைமையின் பாராட்டிற்கு ஆளாவீர். விவசாயத்தில் லாபம் தோன்றும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் உண்டாகும். சந்திராஷ்டமம்: ஆக.  23.அதிர்ஷ்ட நாள்: ஆக. 19, 28. செப். 1,10.பரிகாரம்: நவக்கிரகத்திற்கு தீபமேற்றி வழிபட நன்மை அதிகரிக்கும்.
உத்திரம் 2,3,4 ம் பாதம்: சாதுரியமாக செயல்படும் உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் யோகமான மாதம். ராசிநாதனால் அறிவாற்றல் வெளிப்படும். தடைப்பட்ட வேலை நடந்தேறும். ஒரு சிலருக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். சொத்து வாங்கும் கனவு நனவாகும். குரு பகவான்  ராசியை பார்ப்பதால் செல்வாக்கு உயரும். தொழில், உத்தியோகத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். உடல்நிலையில் இருந்த சங்கடம் விலக ஆரம்பிக்கும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட சங்கடம் விலகும். குலதெய்வ அருள் உண்டாகும். குழந்தைக்கான ஏக்கம் தீரும் நாள் வெகுதொலைவில் இல்லை.  பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். விரய ஸ்தானாதிபதி சூரியன் சஞ்சரிப்பதால் அரசு ஊழியர்கள் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. சுக்கிரன் சஞ்சாரம் மாதம் முழுவதும் இருப்பதால் பொன் பொருள் சேரும். செயல்களில் வெற்றி உண்டாகும். ராகுவால் நட்பு வட்டம் விரிவடையும். ஒரு சிலர் எதிர்பாலினரின் வலையில் சிக்க நேரும். அதனால் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட வாய்ப்பிருப்பதால் எச்சரிக்கை அவசியம். விவசாயிகள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். மாணவர்கள் படிப்பில் அக்கறை கொள்வது நல்லது.சந்திராஷ்டமம்: ஆக. 24.அதிர்ஷ்ட நாள்: ஆக.19,23,28. செப்.1,5,10,14.பரிகாரம்: சக்தி வழிபாட்டால் சங்கடம் விலகும்.அஸ்தம்: புத்தி சாதுரியத்துடன் செயல்படும் உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் சிறப்பான மாதம்.  இருக்கும். குரு, செவ்வாயும் இணைந்திருப்பதால் இதுவரை உங்களுக்கிருந்த சங்கடம் விலகும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். பெரியோரின் ஆதரவால் விருப்பம் நிறைவேறும். வேண்டுதலை நிறைவேற்ற குடும்பத்தினருடன் கோயிலுக்கு சென்று வருவீர்கள். வரவேண்டிய பணம் வரும். புதிய சொத்தும் ஒரு சிலருக்கு சேரும். காவல், ராணுவம், பேரிடர் துறைகளில் பணிபுரிவோருக்கு செல்வாக்கு அதிகரிக்கும்.  ஒரு சிலருக்கு எதிர்பார்த்த மாறுதல் ஏற்படும். செய்துவரும் தொழிலால் வெளியூருக்கு பயணம் ஏற்படும். வசதி வாய்ப்பும், செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடந்தேறும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். சுக்கிரனால் கணவன் மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும். பொன் பொருள் சேரும். ஒரு சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள். விரய ஸ்தான சூரியன் செலவுகளை அதிகப்படுத்துவார். ஒருசிலருக்கு போலி தயாரிப்புகளை விற்பனைச் செய்வதால் சங்கடம் உண்டாகும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். ராகுவால் வெளிநாட்டு முயற்சி லாபத்தை ஏற்படுத்தும். செய்து வரும் தொழிலில் ஆதாயம் அதிகரிக்கும். விவசாயம் செழிப்படையும். மாணவர்கள் ஆசிரியர்கள் ஆலோசனையை ஏற்பது நல்லது.சந்திராஷ்டமம்: ஆக. 24.அதிர்ஷ்ட நாள்: ஆக. 20,23,29. செப். 2,5,11,14.பரிகாரம்: பிரதோஷம் அன்று நந்தியை வழிபட வளம் கூடும்.சித்திரை 1, 2 ம் பாதம்:  தைரியம், துணிச்சலுடன் வெற்றியடைந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் நினைப்பது நிறைவேறும். செவ்வாய் குருவுடன் இணைவதால் சங்கடம் விலக ஆரம்பிக்கும்.  எதிர்பார்ப்பு ஒவ்வொன்றாக பூர்த்தியாகும். சமூகத்தில் அந்தஸ்து செல்வாக்கும் உயரும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். இழுபறியாக இருந்த விவகாரம் முடிவிற்கு வரும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். சகோதரர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் வரும். உடல்நிலை சீராகும். உற்சாகமுடன் செயல்படுவீர். சுக்கிரன் சஞ்சார நிலைகள் மாதம் முழுவதும் சாதகமாக இருப்பதால் பல வழியிலும் லாபம் கூடும். வராமல் இருந்த பணம் வரும். தம்பதிகளுக்குள் இணக்கம் உண்டாகும். சூரியன் விரய ஸ்தானத்தில் மறைவதால் அரசு பணியில் இருப்பவர்களுக்கு நெருக்கடி அதிகரிக்கும். வழக்கமான வேலைகளிலும் உங்கள் கவனம் சிதறும். சுய தொழில் செய்து வருபவர்கள் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. மற்றவர் பிரச்னைகளில் தலையிடுவதும் பஞ்சாயத்து செய்வதும் சிக்கலை அதிகரிக்கும். வெளிநாட்டு முயற்சி தள்ளிப்போகும். வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்பவர்கள் ஏஜண்டுகள் விஷயத்தில் கவனம் தேவை. எதிலும் அவசரம் வேண்டாம். மாணவர்கள் படிப்பில் அக்கறை செலுத்துவது அவசியம்.சந்திராஷ்டமம்: ஆக. 25.அதிர்ஷ்ட நாள்: ஆக. 18,23,27. செப். 5,9,14.பரிகாரம்:  அங்காள பரமேஸ்வரியை வழிபட வளம் உண்டாகும்.
சித்திரை 3,4 ம் பாதம்: சாதனை புரிவதில் வல்லவரான உங்களுக்கு பிறக்கும் ஆவணி மாதம் நன்மையான மாதம். லாபாதிபதி சூரியனால் செல்வாக்கு வெளிச்சத்திற்கு வரும். அரசு வழியில் தடைப்பட்ட வேலை நடக்கும். ஒப்பந்ததாரர்களுக்கு வரவேண்டிய பணம் வரும். தொழில் தொடங்குவதற்காக எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். வியாரத்தில் இருந்த தடை விலகும். வேலைத்தேடியவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். ஒருசிலருக்கு விரும்பிய இடத்திற்கு மாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும்.  குடும்பத்தில் சுபச்செலவு அதிகரிக்கும். நீண்ட நாட்களாக விற்க முடியாமல் இருந்த இடம் விற்பனையாகும். ஒரு சிலர் புதிய வாகனம் வாங்குவீர். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். பணவரவில் ஏற்பட்ட தடை நீங்கும். தாய்வழி உறவுகளால் லாபம் அதிகரிக்கும். ராகுவால் உடல்நிலையில் ஆரோக்கியம் உண்டாக்கும். வியாபாரத்தில் போட்டியாளர் விலகிச்செல்வர். இக்காலத்தில் வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வதின் வழியாக நன்மை கூடும். விவசாயிகள் விளைச்சலில் கூடுதல் கவனம் செலுத்துவர். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.சந்திராஷ்டமம்: ஆக. 26.அதிர்ஷ்ட நாள்: ஆக.18,24,27. செப். 6,9,15.பரிகாரம்: அம்மனை வழிபட வேண்டுதல் நிறைவேறும்.சுவாதி: யோக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் அதிர்ஷ்ட மான மாதம்.  நட்சத்திரநாதனும், சூரியனும் நன்மை செய்ய காத்திருக்கிறார்கள். இதுவரை இருந்த நெருக்கடி இனி இல்லாமல் போகும். ஏதேனும் ஒரு வகையில் தொடர்ந்து  பாதிப்பை சந்தித்து வந்த உங்களுக்கு இனி அதிலிருந்து மாற்றம் ஏற்படும். வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட போட்டி முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைக்கு தீர்வு ஏற்படும். தேங்கியிருந்த பொருட்கள் நல்ல விலைக்கு விற்பனையாகும். வழக்கு விவகாரம் சாதகமாகும். வெளிநாட்டு முயற்சியில் வெற்றி ஏற்படும். அரசியல்வாதிகள் நிலை உயரும். எதிர்பார்த்த பொறுப்பு கிடைக்கும். உங்கள் ராசிநாதன் மாதம் முழுவதும் சாதகமாக இருப்பதால் முன்னேற்றம் அதிகரிக்கும். வருவாய் கூடும். புதிய பொருட்கள் சேரும். குருவின் பார்வை குடும்பத்தில் சந்தோஷ நிலை ஏற்படும். கணவன் மனைவிக்குள் இருந்த பிரச்னை விலகி இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகரிக்கும். புதிய இடம், வீடு என்று ஒரு சிலருக்கு சேரும். விவசாயிகள் எதிர்பாராத நெருக்கடியை சந்திக்க நேரும். மாணவர்களுக்கு மாதம் முழுவதும் படிப்பில் கவனம் தேவை. ஆசிரியர்கள் ஆலோசனைகளை ஏற்கும் மாணவர்கள் முன்னேற்றத்தை நோக்கி நகருவார்கள்.சந்திராஷ்டமம்: ஆக. 26,27.அதிர்ஷ்ட நாள்: ஆக. 22,24, செப். 4,6,13,15.பரிகாரம்: வராகியை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.விசாகம் 1, 2, 3 ம் பாதம்: விருப்பப்பட்ட வாழ்வை வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் முன்னேற்றமான மாதம். ராகு, சூரியன், சுக்கிரன், புதன், குருவின் பார்வைகளால் உங்கள் வாழ்க்கையை வளமாகும். இதுவரை இருந்த நெருக்கடி ஒவ்வொன்றாக விலகும். அரசு வழி முயற்சி எளிதாக நடந்தேறும். சட்ட சிக்கல்கள் விலகும். ஒரு சிலருக்கு புதிய பொறுப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும். இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும். மேலைநாட்டு தொடர்பு லாபத்தை உண்டாக்கும். தொழிலில் இருந்த நெருக்கடி விலகும். எதிர்பார்த்த வருமானம் வரும். செயலில் திட்டமிட்டு லாபம் காண்பீர். புதிய பொருள் சேரும். ஒரு சிலர் புதிய வாகனம் வாங்குவீர். புதிய இடம் வாங்குவது, வீடு கட்டுவது போன்ற முயற்சிகளில் ஈடுபடுவீர். தாய்வழி உறவுகள் ஆதரவு அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்படும். அலுவலகப் பணியில் உயர்வு உண்டாகும். புதிய தொழில் தொடங்க முயற்சித்தவர் விருப்பம் பூர்த்தியாகும். எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். அடிமட்ட பணியாளர், சிறு வியாபாரிகள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு எதிர்காலம் பற்றிய சிந்தனை உண்டாகும். படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.சந்திராஷ்டமம்: ஆக. 27.அதிர்ஷ்ட நாள்: ஆக. 21,24,30. செப்.3,12,15.பரிகாரம்: நவகிரகத்தில் உள்ள குரு பகவானை வழிபட நன்மை உண்டாகும்.
விசாகம் 4 ம் பாதம்: சூழ்நிலையை அறிந்து அதற்கேற்ப வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதத்தை அதிஷ்டம் நிறைந்த மாதம். குருவுடன் உங்கள் ராசிநாதன் ஆக 26 வரை இணைந்து சஞ்சரிப்பதால் இதுவரையில் உங்களுக்கிருந்த சங்கடம் விலகும். வாழ்க்கையில் எதிர்பார்த்த வளர்ச்சியை அடைவீர். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடக்கும். திருமண வயதினருக்கு வரன்வரும். சூரியன் ஆட்சியாக சஞ்சரிப்பதால் வேலைத்தேடி வந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி நிறைவேறும். பணியாளர்கள் ஒத்துழைப்பு அதிகரிக்கும். லாபம் பலவழியிலும் உண்டாகும். உத்தியோகம், தொழில், வியாபாரம் போன்றவற்றில் ஈடுபட்டிருப்போரின் விருப்பம் பூர்த்தியாகும். செல்வமும் செல்வாக்கும் தோன்றும். எதிர்காலத்திற்குரிய பாதைத்தெரியும். குடும்பத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். பெண்களுக்கு குடும்பத்தில் மதிப்பு அதிகரிக்கும். செய்துவரும் தொழில் முன்னேற்றமடையும். பார்த்து வரும் வேலையில் உயர்வு தோன்றும். கணவருடன் இணக்கமான நிலை ஏற்படும். சகோதரர்கள் ஒத்துழைப்புடன் சில வேலைகளில் லாபம் உண்டாகும். மாணவர்களுக்கு மாதத்தின் முற்பகுதியில் படிப்பில் கவனம் சிதறினாலும் பிற்பகுதியில் அக்கறை அதிகரிக்கும்.சந்திராஷ்டமம்: ஆக.28.அதிர்ஷ்ட நாள்: ஆக. 18,21,27,30. செப். 3,9,12.பரிகாரம்: திருச்செந்தூர் முருகனை வழிபட வளம் உண்டாகும்.அனுஷம்: எதிலும் நீதி, நியாயம் பார்த்து வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம்  விருப்பங்கள் நிறைவேறும் மாதம். உங்களை நெருக்கடிக்கு ஆளாக்கி வந்த நட்சத்திர நாதன் சனி வக்கிரமடைந்திருப்பதால் சங்கடம் விலக ஆரம்பிக்கும். உடல்நிலை சீராகும். துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். உங்கள் சந்தோஷத்திற்கு ஏற்பட்ட தடை விலகும். குருவின் பார்வை ராசிக்கு நேரடியாக உண்டாவதால் செல்வாக்கு உயரும். பொருளாதார நிலை உயரும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடந்தேறும். கேது சஞ்சரிப்பதுடன் குருவின் பார்வையும் கிடைப்பதால் வருமானம் உயரும். ஆன்மிகவாதிகள் செல்வாக்கினை அடைவர். வெளிநாட்டுத் தொடர்புகள் ஆதாயத்தை வழங்கும். விவாகரத்து பெற்றவர்களுக்கும் துணையை இழந்தவர்களுக்கும் மறுமணத்திற்குரிய முயற்சி வெற்றியாகும். ஜீவன ஸ்தானத்தில் சூரியன் ஆட்சியாக சஞ்சரிப்பதால் வேலைக்காக மேற்கொண்ட முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு வரும். வித்யாகாரகன் புதனால் மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். ராசிநாதன் ஆக 27 முதல் மறைவு பெறுவதால் விவசாயிகள் விளைச்சலில் கவனம் செலுத்துவது நல்லது. காவல்துறை, ராணுவம், மீட்பு பணிகளில் ஈடுபட்டிருப்போர் பணிகளில் விழிப்புடன் செயல்படுவது அவசியம்.சந்திராஷ்டமம்: ஆக.28,29.அதிர்ஷ்ட நாள்: ஆக. 17,18,26,27. செப். 8,9.பரிகாரம்: குரு பகவானை வழிபட நன்மை உண்டாகும்.கேட்டை: ஒவ்வொரு முறையும் வெற்றி பெறும் உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் விஜய வெற்றிக்கான மாதம். உங்கள் ராசிநாதனுடன் குருவுடன் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால்  மண்ணைத் தொட்டாலும் பொன்னாகும். சிறிய முயற்சியிலும் பெரியலாபம் கிடைக்கும். வாழ்க்கையில் இருந்த சங்கடமெல்லாம் விலகும். சந்தோஷம் அதிகரிக்கும். நீங்கள் எதிர்பார்த்த புதியபாதை தெரியும். தம்பதியரிடையே இருந்த சங்கடம் விலகும். ஒரு சிலருக்கு திருமணம் நடக்கும். செவ்வாய் அஷ்டம ஸ்தானத்தில் மறைந்தாலும் குரு வழங்கும் யோகப் பலன் தொடரும். உங்கள் ஜீவனாதிபதி ஆட்சியாக சஞ்சரிப்பதால் தொழில் உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். வேலைத் தேடியவர்களுக்கு தகுதிக்குரிய வேலை கிடைக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். புதிய தொழில் தொடங்க எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். மாதத்தின் முற்பகுதியில் சுக்கிரனால் நன்மைகளை வழங்க முடியாமல் போனாலும் ஆக 26 முதல் கனவு நனவாகும். பொன் பொருள் சேரும். புத பகவானின் சஞ்சார நிலை மாதம் முழுவதும் சாதகமாக இருப்பதால் கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.சந்திராஷ்டமம்: ஆக. 29,30.அதிர்ஷ்ட நாள்: ஆக. 18,23,27. செப்.  5,9,14.பரிகாரம்: பெருமாளை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
மூலம்: பிறருக்கு நல்வழி காட்டும் மனம் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் அதிர்ஷ்டமான மாதம். பாக்கிய ஸ்தானத்திற்கு சூரியன் பெயர்ச்சியாகி ஆட்சி பெறுவதால் கடந்த மாத நெருக்கடி காணாமல் போகும். பெரியோரின் ஆதரவும் தெய்வ அனுகூலமும் உண்டாகும். கேது, கேந்திர பலம் பெற்று ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். உத்தியோகத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதுடன் ஒரு சிலருக்கு புதிய பொறுப்பும் வரும். தன, குடும்ப ஸ்தானத்திற்கு குருவின் 9 ம் பார்வை பார்வை உண்டாவதால் குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். உங்கள் பூர்வ புண்ணியாதிபதி செவ்வாய் ஆக. 26 வரை குருவுடன் இணைந்து சஞ்சரிப்பதால் நீண்டநாள் பிரச்னைகள் முடிவிற்கு வரும். வழக்கு விவகாரம் சாதகமாகும். உடலை வாட்டிக் கொண்டிருக்கும் நோய் விலகும். நம்பிக்கையோடு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்.  புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் ஒரு சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். புதிய சொத்து சேரும் மாணவர்கள் படிப்பில் முழுமையான கவனம் செலுத்துவது நல்லது.சந்திராஷ்டமம்: ஆக. 30,31.அதிர்ஷ்ட நாள்: ஆக. 21,25,30. செப்.  3,7,12,16.பரிகாரம்: காளத்தீஸ்வரரை எண்ணி வழிபட நன்மை உண்டாகும்.பூராடம்: உலக அறிவும், அதிர்ஷ்ட வாய்ப்புகளும் பெற்று வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் யோகமான மாதம். நட்சத்திர நாதன் சுக்கிரன் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பார்ப்பு நிறைவேறும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். 6 ம் இடத்தில் உங்கள் பூர்வ புண்ணியாதிபதி செவ்வாய் குருவுடன் இணைந்து ஆக.26 வரை சஞ்சரிப்பதால் குரு மங்கள யோகம் உண்டாகி உங்கள் நிலையில்  எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். உங்கள் ஆற்றல் அதிகரிக்கும். போட்டியாளர்கள் விலகிச் செல்வர். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு குறையும். வழக்கு விவகாரம் உங்களுக்கு சாதகமாகும். குடும்பத்தில் சுப செயல் நடப்பதற்கான அறிகுறிகள் தோன்றும். ஆக. 27 முதல் குருவின் பார்வைகள் தொடர்ந்து உங்கள் நிலையைப் பாதுகாக்கும். குடும்பத்தில் ஒற்றுமையை உண்டாக்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமையை அதிகரிக்கும். எதிர்பார்த்த பணவரவை வழங்கும். செய்துவரும் தொழில் லாபத்தை ஏற்படுத்தும். பார்த்து வரும் உத்தியோகத்தில் விரும்பிய மாற்றம் உண்டாக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். விவசாயிகள் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டியதாக இருக்கும்.சந்திராஷ்டமம்: ஆக. 31. செப். 1.அதிர்ஷ்ட நாள்: ஆக. 21,24,30. செப். 3,6,12,15.பரிகாரம்: ஹயக்ரீவரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.உத்திராடம் 1 ம் பாதம்: புத்தி சாதுரியமும் கொண்டு வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் நன்மைகள் நிறைந்த மாதம். சூரியன் அஷ்டம ஸ்தானத்தை விட்டு பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் கடந்த மாதத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். திறமை வெளிப்படும். எதிர்பார்ப்புடன் மேற்கொள்ளும் வேலைகளில் லாபம் உண்டாகும். அரசு வழியில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். விஐபிகள் தொடர்பும் தெய்வ அருளும் உங்கள் நிலையை உயர்த்தும். செவ்வாயும், சுக்கிரனும் உங்கள் நிலையில் உயர்வை ஏற்படுத்தும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் பலம் இழந்து பின் வாங்குவர். வியாபாரத்தில் இருந்த போட்டியாளர் விலகிச் செல்வர். வழக்கு விவகாரம் சாதகமாகும். ஒரு சிலருக்கு சொத்து சேர்க்கை ஏற்படும். தைரியமும் துணிச்சலும் உண்டாகி நினைத்ததை சாதிப்பீர். உங்கள் ராசிநாதன் குருவின் பார்வைகளால் தொழில், உத்தியோகம், வியாபாரம் போன்றவற்றில் முன்னேற்றம் ஏற்படும். ஒரு சிலர் புதிய சொத்து, வாகனம் என்று வாங்குவீர். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை உண்டாகும்.  எத்தனைப் பிரச்னைகள் ஏற்பட்டாலும் அதிலிருந்து உங்களால் விடுபட முடியும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு வரும். விவசாயிகளுக்கு ஆதாயம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தோன்றும்.சந்திராஷ்டமம்: செப். 1.அதிர்ஷ்ட நாள்: ஆக. 19,21,28,30. செப். 3,10,12.பரிகாரம்:  சூரிய நமஸ்காரம் செய்வதால் சங்கடம் விலகும்.
உத்திராடம் 2,3,4 ம் பாதம்:  முன்னேற்றப் பாதையில் நடைபோடும் உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் யோகமான மாதம். 5 ம் இடத்தில் சஞ்சரிக்கும் குரு பகவானால் உங்கள் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். செல்வாக்கு அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். தொழில், வியாபாரம் லாபம் அடையும். போட்டியாளரால் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். வரவேண்டிய பணம் வரும். உத்தியோகத்தில் இருப்போரின் கோரிக்கை நிறைவேறும். ராகுவும்,  கேதுவும் உங்கள் முயற்சிகளை வெற்றியடைய வைப்பார்கள். தடைப்பட்ட வேலை விறு விறுவென நடந்தேறும். வேலை, கல்வி, வியாபாரத்திற்காக வெளிநாடு செல்லும் முயற்சி வெற்றியாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். பாக்ய, லாப ஸ்தானங்களுக்கும் ஜென்ம ராசிக்கும் குருவின் பார்வைகள் உண்டாவதால் தெய்வ வேண்டுதலை நிறைவேற்றுவீர். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். அரசியல் வாதிகளுக்கு பதவி, பொறுப்பு என்று நிலை உயரும். புதிய நட்பால் உங்கள் மனம் மகிழும். மாதம் முழுவதும் சுக்கிரனின் சஞ்சார நிலை சாதகமாக இருப்பதால் அதிர்ஷ்ட வாய்ப்பு  வரும். பொன் பொருள் சேரும். கணவன் மனைவிக்குள் இணக்கம் உண்டாகும். விவசாயிகள் எதிர்பார்ப்பு நிறைவேறும்,  உயர்க்கல்வி பயிலும் மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.சந்திராஷ்டமம்: செப். 2.அதிர்ஷ்ட நாள்: ஆக. 17,19,26,28. செப். 8,10.பரிகாரம்: சனீஸ்வரரை வழிபட நன்மை அதிகரிக்கும்.திருவோணம்: நீதி, நேர்மையே வாழ்க்கை என வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் யோகமான மாதம். ராகுவால் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். தைரியமாக செயல்பட்டு மற்றவரால் முடிக்க முடியாத வேலைகளை முடிப்பீர்கள். நீங்களே நினைத்துப்பார்க்க முடியாத இடத்திற்கு உங்கள் நிலை உயரும். வெளிநாட்டு முயற்சி வெற்றியாகும். ஒரு சிலருக்கு அடிக்கடி விமானப் பயணம் உண்டாகும். பூர்வ புண்ணிய ஸ்தானமான 5 ம் இடத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் நீண்ட நாள் கனவை நனவாக்குவார். பட்டம் பதவி புகழ் உங்களைத் தேடிவரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். திருமண வயதினருக்கு வரன் வரும். ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். அரசியல் வாதிகளின் செல்வாக்கு உயரும். பணம் பல வழிகளிலும் வரும். கோயில் வேண்டுதல் நிறைவேறும். தொழில், வியாபாரம் விருத்தியாகும். பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். செவ்வாயால் உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும். எதிர்ப்புகளும் போட்டியும் நீங்கும். இழுபறியாக இருந்த விவகாரம் முடிவிற்கு வரும். உங்களுக்கு புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் புதிய சொத்து சேரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். ஆசிரியர்கள் ஆலோசனைகளை ஏற்பீர்.சந்திராஷ்டமம்: செப். 3.அதிர்ஷ்ட நாள்: ஆக.17,20,26,29. செப். 2,8,11.பரிகாரம்: பிரகதீஸ்வரரை வழிபட வளம் உண்டாகும்.அவிட்டம் 1, 2 ம் பாதம்: நிதானமுடன் வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் முன்னேற்றமான மாதம். உங்கள் நட்சத்திரநாதன் குருவுடன் இணைந்து செயல்களில் லாபத்தை உண்டாக்குவார். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். தொழில் வியாபாரத்தில் குறுக்கிட்ட போட்டியாளர்களை பலம் இழப்பார்கள். உங்கள் முயற்சிகளில் வெற்றியும் செயல்களில் லாபமும் உண்டாக்கும். அசாத்தியமான துணிச்சலுடன் செயல்பட்டு நினைப்பதை நடத்தி முடிப்பீர்கள். குரு பகவானின் சஞ்சார நிலையும் பார்வைகளும் உங்கள் நிலை மேலும் உயரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். எதிர்பார்ப்புகளை பூர்த்தியாக்கும். தடைகளை எல்லாம் தாண்டி தொழிலில் முன்னேற்றம் அடைவீர். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு கிடைக்கும். குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கியவர்கள் கனவு நனவாகும். திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தம்பதிகளுக்குள் இருந்த பிரச்னை விலகும். ராகுவின் அருளால் நினைப்பதை நினைத்தபடி செய்து வெற்றியடைவீர். சகோதரர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர். விவசாயத்தில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். சுக்கிரனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் இந்த மாதம் யோகமான மாதமாக இருக்கும்.சந்திராஷ்டமம்: செப். 4அதிர்ஷ்ட நாள்: ஆக. 17,18,26,27. செப். 8,9.பரிகாரம்: நவக்கிரக வழிபாட்டால் நன்மை உண்டாகும்.
அவிட்டம் 3,4 ம் பாதம்: சூழ்நிலைக்கேற்ப செயல்பட்டு எதையும் சாதிக்கும் திறன்பெற்ற உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் திட்டமிடும் மாதம். சூரியனால் உங்கள் வேலைகளில் வேகம் இருக்கும். எந்த ஒன்றிலும் நிதானம் என்பது இல்லாமல் போகும். உத்தியோகத்தில் இருக்கும் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். குடும்பத்திற்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி உண்டாகும். சுக்கிரன் களத்திர ஸ்தானத்திலேயே சஞ்சரிப்பதால் எதிர்பாலினரால் உங்கள் செயல் மாறும். தேவையில்லாத பிரச்னை உருவாக வாய்ப்பிருப்பதால் எச்சரிக்கை அவசியம். குடும்பத்தினருடன் இணக்கம் உண்டாகும். குரு பகவானின் பார்வையால் உங்களை பயமுறுத்திக் கொண்டிருந்த நோய்கள் விலகும். நீங்கள் செய்துவரும் தொழிலில் ஏற்பட்ட தடை நீங்கும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு தகுதிக்குரிய வேலைக் கிடைக்கும். 9 ம் பார்வை விரய ஸ்தானத்திற்கு ஏற்படுவதால் புதிய இடம் வாங்குவது, வாகனம் வாங்குவது, நகை வாங்குவது என்று செலவு அதிகரிக்கும். தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்தில் சர்ப்ப கிரகம் சஞ்சரிப்பதால் உறவுகளை அனுசரித்துச் செல்வது நல்லது. விவசாயிகளுக்கு உழைப்பு அதிகரிக்கும். புதன் உங்களுக்கு சாதகமாக சஞ்சரிப்பதால் புதிய முயற்சிகள் பலிதமாகும். இடம், வீடு வாங்குவீர்கள். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும் மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் கூடும்.சந்திராஷ்டமம்: செப். 4.அதிர்ஷ்ட நாள்: ஆக. 17,18,25,27. செப். 8,9.பரிகாரம்: மாரியம்மனை வழிபட நன்மை உண்டாகும்.சதயம்: நிதானமாக செயல்பட்டு நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் கவனமுடன் செயல்பட வேண்டிய மாதம். ராகு தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் குடும்பத்திற்குள் ஏதாகிலும் ஒரு குழப்பம் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். உங்கள் வார்த்தைகளால் பிரச்னைகள் உருவாகும் என்பதால் பேச்சில் நிதானம் தேவை. கேது அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்து வருவதால் தொடர்ந்து அல்லல்களுக்கு ஆளாகி வரும் உங்களுக்கு குருவின் பார்வை அவற்றிலிருந்து மாற்றத்தை உண்டாக்கும். உங்கள் திறமை வெளிப்படும். தொழில் ஸ்தானத்திற்கும் குருவின் பார்வை உண்டாவதால் தொழிலில் இருந்த தடை விலகி முன்னேற்றம் உண்டாகும். இந்த நிலையில் சூரியனால் வேலைகளில் டென்ஷன் அதிகரிக்கும். மனதில் ஏதாகிலும் ஒரு சிந்தனை ஏற்பட்டு உங்களைக் குழப்பமடைய வைக்கும். அரசுப்பணியில் இருப்பவர்களுக்கு நெருக்கடி அதிகரிக்கும். ஒரு சிலருக்கு தேவையற்ற இடமாற்றம் ஏற்படும். இந்த நேரத்தில் சுக்கிரனின் சஞ்சாரத்தால் எதிர்பாலினரால் குடும்பத்திற்குள் குழப்பம், வேலையில் கவனமின்மை என்ற நிலை உருவாகும். புதனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் இழுபறியாக இருந்த வேலைகள், பத்திரப்பதிவு முடியும். நினைத்த வேலைகளை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். இந்த மாதத்தில் தம்பதிகள் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது மிக அவசியம்.சந்திராஷ்டமம்: செப். 5.அதிர்ஷ்ட நாள்: ஆக. 17,22,26,31. செப். 4,13.பரிகாரம்:  துர்கையை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.பூரட்டாதி 1, 2, 3 ம் பாதம்: வாழ்வில் எப்போதும் வெற்றிபெறும் உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் நிதானமான மாதம். உங்கள் நட்சத்திர நாதனால் நட்புகளுடன் மோதல், தாய்வழி உறவுகளுடன் சங்கடம் என்ற நிலை உருவாகும் என்றாலும், குருவின் பார்வை அஷ்டம, ஜீவன, விரய ஸ்தானங்களுக்கு உண்டாவதால் உங்கள் செல்வாக்கு வெளிப்படும். உடலில் ஏற்பட்ட சங்கடம் விலகும். எதிரி செய்த சதிகளில் இருந்து வெளியில் வருவீர்கள். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி குறையும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். தொழில் வியாபாரம் லாபமடையும். பெண்கள் உடல்நிலையும் மன நிலையும் முன்னேற்றமடையும். வாழ்க்கைத் துணைக்கிருந்த பாதிப்பு விலகும். புதிய சொத்து, வாகனம் என்ற விருப்பம் நிறைவேறும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். செவ்வாயால் விவசாயிகளின்  எதிர்பார்ப்பு இழுபறியாகும். யூனிபார்ம் துறையினருக்கு நெருக்கடி அதிகரிக்கும். ஒரு சிலருக்கு விரும்பாத இடமாற்றமும் ஏற்படும். ஆசிரியர்களின் தீவிர கண்காணிப்பால் மாணவர்கள் நிலையில் முன்னேற்றம். ராகு, சுக்கிரன் சஞ்சரத்தினால் குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதுடன் எதிர்பாலினர் நட்பில் கவனமாக இருப்பது நல்லது. வெளிநாட்டிற்கு செல்பவர்கள் அங்குள்ள நிலையை நன்றாக அறிந்து கொண்டு செல்வது அவசியம்.சந்திராஷ்டமம்: செப். 6.அதிர்ஷ்ட நாள்: ஆக. 17,21,26, 30. செப். 3,8,12.பரிகாரம்: நவக்கிரக வழிபட நன்மை தரும்.
பூரட்டாதி 4 ம் பாதம்: எதையும் முன்னதாக அறிந்து செயல்படும் உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் யோகமான மாதம்.  ராசிநாதன் சாதகமாக இல்லை என்றாலும் அவருடன் செவ்வாய் இணைந்திருப்பதால் முயற்சிகள் பலிக்கும். திட்டமிட்ட வேலைகளை திட்டமிட்டபடி செய்து முடிப்பீர். பணியாளர்களுக்கு மற்றவரின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொடர்ந்து குரு பகவானின் பார்வைகள் சப்தம, பாக்ய, இலாப ஸ்தானங்களுக்கு உண்டாவதால் மனதில் இருந்த சங்கடம் நீங்கும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். நட்புகளால் நன்மை உண்டாகும். கூட்டுத்தொழிலில் லாபம் தோன்றும். பெரிய அளவில் முதலீடு செய்தும் எதிர்பார்த்த வருவாய் வரவில்லையே என்ற நிலை மாறும். வரவேண்டிய பதவி உயர்வு வரும். இடமாற்றம் கிடைக்கும். வாழ்வில் எல்லாம் இருந்தும் நிம்மதி இல்லை, தெய்வம் நமக்கு கண் திறக்கவில்லை என்று வருந்துவோருக்கு  குலதெய்வ அருளும் இஷ்ட தெய்வ அனுக்கிரகமும்  உண்டாகும். கோயில் வேண்டுதல்களை நிறைவேற்றுவீர். உங்கள் மனதில் புதிய உற்சாகம் தோன்றும். திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். எதிர்பார்த்த பணம் வரும். கடன்கள் அடையும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். அவமானம் நெருக்கடி விலகும். விவசாயிகள் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.சந்திராஷ்டமம்: செப். 7.அதிர்ஷ்ட நாள்: ஆக. 21,30. செப். 3,12.பரிகாரம் நவக்கிரக குரு பகவானை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.உத்திரட்டாதி: வாழ்வின் உயரத்திற்கு மெல்ல மெல்ல செல்லும் தங்களுக்கு பிறக்கும் ஆவணி மாதம் அதிர்ஷ்டமான மாதம். 6 ம் இடத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கும் சூரியனால் இதுவரை உங்களுக்கு இருந்த பாதிப்பு நெருக்கடி யாவும் விலகும். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்த பிரச்னை விலகுவதுடன் எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். மறைமுக எதிரி விலகுவர். தொழில் போட்டியாளர்கள் பலமிழப்பர். வழக்கு விவகாரங்களில் சாதகம் உண்டாகும். 3 ம் இடத்தில் சஞ்சரிக்கும்  ராசிநாதனுடன் செவ்வாய் இணைவு பெறுவதால் குரு மங்கள யோகம் உண்டாகி  கனவுகளை நனவாகும். நிறைவேறாமல் போன வேலை நடக்கும். குருவருளால் விலகிச்சென்றவர் மீண்டும் வருவர். திருமண வயதினருக்கு வரன் வரும். மறுமணத்திற்காக முயற்சி மேற்கொண்டோருக்கு விருப்பப்பட்ட துணை அமையும். தடைப்பட்ட பணம் வரும். பெரியோரின் ஆசீர்வாதம் உண்டாகும். சுக்கிரனால் சிலருக்கு அவப்பெயர் ஏற்படும். குடும்பத்தில் சங்கடம் தோன்றும் என்பதால் எச்சரிக்கை அவசியம். புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். வெளிநாடு செல்ல முயற்சித்தவர்கள் விருப்பம் பூர்த்தியாகும். எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். அரசியல் வாதிகள் செல்வாக்கு உயரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை உண்டாகும்.சந்திராஷ்டமம்: செப். 7,8.அதிர்ஷ்ட நாள்: ஆக. 17,21,26,30. செப். 3,12.பரிகாரம்: பிரத்தியங்கிராவை வழிபட வளம் உண்டாகும்.ரேவதி: இளகிய மனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் நினைப்பது நிறைவேறும் மாதம்.  நட்சத்திர நாதன் புதன் மாதத்தின் முற்பகுதியில் உங்களுக்கு மன ரீதியாக சில சங்கடங்களை ஏற்படுத்தி அவமானம் ஏற்பட்டாலும் உங்கள் நிலையை உயரும். செல்வாக்கை அதிகரிப்பார். வசதி வாய்ப்புகளை உண்டாக்குவார். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் சேரும். மாணவர்களுக்கு படிப்பில் ஈடுபாடு அதிகரிக்கும். குருவின் பார்வையால் திருமண வயதினருக்கு வரன்வரும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். நண்பர்களால் அனுகூலம், ஆதாயம் ஏற்படும். தெய்வ அருள் பக்க பலமாகும். நண்பர்களால் விருப்பம் நிறைவேறும். ஒரு சிலர் மறுமணத்திற்குரிய முயற்சியை மேற்கொள்வர். செலவு கட்டுப்படும். காணாமல் போன பொருள் திரும்ப கிடைக்கும். பண நெருக்கடி விலகும். முயற்சி  வெற்றியாகும். அரசியல்வாதிகள் நிலை உயரும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். ராசிக்குள் ராகு சஞ்சரிக்கும் நிலையில் ஆக 27 முதல் 7 ம் இடத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் உங்கள் மனம் தடுமாறும். எதிர்பாலினரின் சூழ்ச்சி வலைக்குள் ஒரு சிலர் சிக்குவதுடன் அதனால் அவமானங்களையும் சந்திக்க வேண்டியதாக இருக்கும் என்பதால் உங்கள் செயல்களில் எச்சரிக்கை அவசியம். சந்திராஷ்டமம்: செப். 8,9.அதிர்ஷ்ட நாள்: ஆக. 21,23,30. செப். 3,5,14.பரிகாரம்: சொக்கநாதரை வழிபட வளம் உண்டாகும்.
Advertisement Tariff
Advertisement


      Our Apps Available On




      Dinamalar

      Follow us